புதுக்கு சோதனை?

புதிய பிளாகரில் சோதனைப் பதிவு..
தயவு செய்து, சிரமத்திற்கு மன்னிக்கவும்..
நன்றி.

வெந்நீர் வைப்பது எப்படி?

நான் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி...

பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இடம்போட்டு வைக்கவே இப்பதிவு..
கையொப்பம் போடமுடியாத எந்தக்கருத்தையும் எழுதக்கூடாதாமே...
வெந்நீர் வைக்க கற்றுக்கொண்டும், கையொப்பத்தினை வருடி எடுத்துக்கொண்டும் வருவேன்...

நன்றி..

நான் இந்து அல்ல!..

அன்பர்களுக்கு வணக்கம்.

கடந்த சில பதிவுகளைப்பார்த்துவிட்டு, பெரும்பான்மையான
அன்பர்கள் என்னைப்பற்றி தவறான் தகவல்களைக்
கொண்டிருக்கின்றனர் என் அறிய வருகிறேன்.

நான் சிறுவயதிலிருந்தே, என் பார்வையில், விடாது,
சந்தித்து வரும் மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாகவும்,
தன்னிலை விளக்கமாகவும் அமையும் என நம்புகிறேன்.

காரிரு ளுள்ளக் கயவரன்ன மாந்தர்
மாரியை தாயை மழையை - பாரினில்
ஆரியப் பாவையாம் ரேணுகா தன்முகம்
மாறியென்றனர் எதுகை கெடுத்து.....



இருட்டரையில்
உள்ளதையா உலகம்
எனையும்
இந்து என்பவர்
இருக்கின்றாரே!

மாய்ந்து மாய்ந்து,
ஆயிரம்பேர் அரற்றினாலும்
பொய்யுரைகளை புகுத்தினாலும்
அல்லன அகற்றி
நல்லன நிலைநாட்ட
உண்மையை உரத்துச்சொல்ல
வேண்டியிருக்கிறது.

இன்றுவரை,
"நீ இந்துதானே?" என
வினவியவரிடமெலாம்
"இல்லை" என்றே
பதிலிருத்திருக்கிறேன்.
இனிமேலும் அப்படியே...

எனை கட்டிவைத்து
அடித்தாலும்
எட்டி உதைத்தாலும்,
கண்ணைக் கட்டி
கழுவிலேற்றினாலும்
எனது நிலைப்பாடு
"நான் இந்து அல்ல" என்பதே...

ஆம், இந்து எனது
சித்தி மகள்....
கல்லூரியில் பயில்கிறாள்....

சான்றோரே... சிந்தியுங்கள்...
படித்தோரே எனது
பதைக்கும் மனதை
புரிந்துகொள்ளுங்கள்.


கேளுங்கள் என் கதையை...
என்னதான் நான் வயதில்
மூத்தவளாயினும்...
அவளுக்கும்,
அவள் குடும்பத்திற்குமுள்ள
"பவிசு" காரணமாக
பெரும்பாலான நேரங்களில்
அவளைக்கொண்டே நான்
அறியப்பட்டிருக்கிறேன்.

சற்றே உருவ ஒற்றுமை
இருக்கிறது
என்பதற்காக
எனது தனித்தன்மையை
இழக்கவேண்டுமா என்ன?



உங்களின் நிலைப்பாட்டை, உங்களின் பதிவிலோ அல்லது
இந்த பதிவிலோ தெரியப்படுத்தலாம்.

நன்றி..

திராவிடர்களும் ஆரியர்களே!...

என்ன தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியமாய் இருக்கிறதா?
எனக்குக் கூட இத்தகவலை கண்டவுடன் மிகவும் மலைப்பாய் இருந்தது.


இந்நாள் வரை வலைப்பதிவர்களின் உண்மைத்தேடல் மூலம் நான் அறிந்திருந்தவை....
* - திராவிடம் என்பதே பொய், ஆனால் ஆரியம் என்பது இருந்தது
*- திராவிடம் என்பதே திராவிட(?) மொழிகளின் சொல் அல்ல..
*- இன்னும் கேட்டால் மிலேச்சர்கள் என்று ஒன்றும் கிடையாது. வடமொழியைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற விதியால் பாதிக்கப்பட்ட எவனோ ஒருவன் செய்த இடைசெருகல்தான் மிலேச்சர்கள், அசுரர்,மிலேச்சபாஷை போன்ற சொற்கள்.

அனால் இந்த பொழிப்புரையாசிரியரின் விளக்கத்தைக் கண்டவுடன் ஆரியர்கள் என்போர் யார் என்ற சந்தேகம் தீர்ந்தது.


கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் வில்லவனின் மனத்தடுமாற்றத்தையும், அவனது போலி வேதாந்தத்தையும் பற்றி விவரிக்கப்படுகிறது.

அதுவரை வாளாவிருந்த பகவான், இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில், இரண்டாம் பாடலாக வில்லவனை பார்த்து சொல்கிறார்.

ஸ்ரீபகவானுவாச...குதஸ்வா கச்மலமிதம் விஷமே
ஸ்முபஸ்திகம் அநார்யஜூஷ்டம ஸ்வர்க்யம கீர்திகரமர்ஜூன

அதாவது,

அர்ஜுன - அர்ஜூனா...
விஷமே- நெருக்கடியில்
குத- எங்கிருந்து
இதம்- இந்த
அநார்ய ஜூஷ்டம் - ஆரியனுக்கு அடாதது
அஸ்வர்க்யம்- சுவர்கத்திற்கு தடையாவது
அகீர்த்திகரம் -புகழைப் போக்குவது
கச்மலம்- மோகம்
(பொறாமை - இதுவும் பாடம், சில புத்தகங்களில் இவ்வார்த்தைக்கு பொறாமை என பொருள் கூறப்பட்டுள்ளது,
இது இடத்திற்கு தகுந்தவாறு மாறுமா எனத் தெரியவில்ல,
அறிந்தோர் தெரிவிக்கவும்..)
த்வா -உன்னிடத்து
ஸமுபஸ்திகம் - அடைந்தது?


ஸ்ரீபகவான் சொன்னது..

அர்ஜூனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப்போக்குவதுமான
இவ்வளவுச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து
உன்னை வந்தடைந்தது?


என்று கேள்வி எழுப்புகிறார்..


(நடுநடுவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை தனித்து காட்டியிருக்கிறேன்.)

பகவான் அனைத்தும் அறிந்தவர்,
ஆனால் இத்தைய கேள்வியை ஏன் அறியாத மானுடத்தன்மை
கொண்ட வில்லவனை பார்த்து கேட்டார் எனத்
தெரியவில்லை...ஒருக்கால் அறிவினாவாக இருக்கக்கூடும். :))


கேள்வியை விட்டுத்தள்ளுங்கள்...

நம் விவாதப் பொருளுக்குத் தேவைப்படும் அநார்ய ஜூஷ்டம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

இச்சொல்லுக்கு பொழிப்புரையாசிரியர் கூறும் விளக்கத்தைக் காண்போம்.


ஆரியன் என்னும் பதம் நம் சாத்திரங்களில் வந்தமைவது
ஒரு தேசம் அல்லது ஒரு ஜாதிக்கு உரியவனைக் குறிப்பதற்கன்று.
பண்பட்ட மனதும் சிறந்த வாழ்க்கை முறையும்,
எவனிடத்துளதோ அவன் ஆரியன்.

(போட்டாரையா ஒரு போடு)

இது போன்று துரை, gentleman, அந்தணன், சாஹிப் முதலிய (முதலியார் அல்ல) சொற்கள் மேன்மக்களது பண்பைக் குறிப்பனவாம்.
தவம் புரிந்து (பாயசம் பெற்று?) பெறும் பிள்ளைகள்
ஆரியர் ஆகின்றனர் என்பதும்,(பிறந்தாலே போதுமா?, பண்பட்ட மனது
தேவையில்லையா?
) காம வசப்பட்டவர் பெற்ற பிள்ளைகள் ஆரியர் ஆவதில்லை
என்பதும் மனுஸ்மிருதியின் கோட்பாடாகும்.

மக்கள் அனைவரையும் ஆரியன் ஆக்குவது வேதாந்ததின்
நோக்கமாகும். (இது இன/மத மாற்றம்/அழிக்கப்படும்
பன்முகத்தண்மை கீழ்
வருமா?)

மேன்மகனாகிய வில்லவன் கீழ்மகன் போன்று
நடந்துகொள்வதை பகவான் நிராகரிக்கிறார்.(வெட்டு குத்து, குருதி
என்று போரிட்டு உறவினரை ஒழிப்பதுதான் மேன்மக்களின் பண்பு போலும்
)

நெருக்கடியில் மனக்கலக்கமடைபவன் ஆரியன் இல்லை.அத்தகையவனுக்கு இவ்வுலகும்
இல்லை, அவ்வுலகும் இல்லை.



என்பதாக கருத்து சொல்கிறார்.


அன்பர்களே....

திராவிடர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் என்றே கருதுகிறேன்.

ஆகவே அவர்களும் ஆரியரே..
ஆரியரின் மதம் இந்து மதம் (இதில் சாஹிப்களும் அடக்கம்).
இந்துமதமே கீழ்மக்களை நல்வழிப்படுத்தி ஆரியராக்குகிறது.
இக்கருத்துகள் நாம் அனைவரும் இந்துவே பதிவுகளுக்கு
மேலும் வலு சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.


இது தொடர்பான முதல் இரண்டு பதிவுகளைக்காண...


குறிப்பு:

என்னதான் இப்பதிவு நாம் அனைவரும் இந்துவே என்ற
கருத்திற்கு பொருந்த்தமாய் இருந்தாலும்,"நாம் அனைவரும் இந்துவே"
என்ற தலைப்பு வைக்கமுடியாத அளவுக்கு சில இடைஞ்சல்கள் நேர்ந்துள்ளன.

அதுபற்றி எதிர்வரும் பதிவில் சொல்வேன்...
நன்றி.

இது உண்மையா?

எனக்கு வந்த மயிலில் கீழ்கண்டவாறு இருந்தது.
யாருக்கேனும் இது குறித்த தகவல் தெரியுமா?
இதன் நம்பகத்தன்மை என்ன?


Dear all ,
ICICI ATM / Debit cards can be used at SBI ATMs to withdraw money and most shocking thing is, it does not ask for your PIN**. Even if it asks for pin and if u cancel it, it goes on to the next screen and enables you to withdraw cash. This security vulnerability was shown live on India TV news channel at SBI ATM in Hyderabad. So please take utmost care of your ICICI ATM / Debit cards to avoid any such misuse.


நன்றி,

நாம் அனைவரும் இந்துவே தொடர் தொடர்பாக...

அன்பர்களே!..

அன்பர் ஹரிஹரன் அவர்களின் பதிவைப் பார்க்கும்போது, அவர் கூறியுள்ள கருத்துகளில் சில ஏற்புடையவனாக உள்ளன. தீராத விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கும்போது, கீதையைப் படித்தால், நம் பகவான் கூறும் சில கருத்துக்கள் நமக்கு புரியாமற் போகலாம்.

ஆகையால் கீதை என்பது "அனைவருக்கும் அல்ல". அது "வயது வந்தோர்க்கு மட்டும்" என்பது போல குடும்பிகள்/மனமுதிர்ந்தவர்(முறிந்தவர் அல்ல)/குறிப்பிட்ட வயது வந்தவர்க்ளுக்கானது அல்லது சாமியார்களுக்கானது என தெளிந்தேன்.

ஏற்கனவே, "திராவிடர்களும் ஆரியர்களே", "பகவானின் தன்முரண்பாடு" போன்ற பதிவுகளை எழுதி சேமித்து வைத்திருந்தாலும், அன்பர் ஹரிஹரன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் சரியென இருத்தலாலும், இப்பதிவுகளை மேற்கொண்டு வெளியிடலாமா என்ற மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நம்மில் ஒவ்வொருவருக்கும் தற்போதைய உருப்படியானவை/முக்கியத்துவமானவை என்ற பல்வேறு கோணங்கள் இருக்கும். அதில் இந்த கீதை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததாய் இருக்கலாம்.

ஆகவே,
இங்களின் மேலான கருத்துக்களை சார்ந்து, நாம் அனைவரும் இந்துவே தொடரின் தொடர்ச்சி இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதரவுக்கு நன்றி..

நாம் அனைவரும் இந்துவே - 2

சென்ற நாம் அனைவரும் இந்துவே பதிவிலே கூறியிருந்ததைப் படித்துப் பார்த்த பெருமக்கள் பலர், கீதையை சொல்லியுள்ளதை பின்பற்றியே ஆகவேண்டுமா?

அல்லது வேதங்கள் மற்றும் உள்ள சாஸ்திரங்களை பின்பற்றவேண்டுமா என புத்தி தடுமாற்றமடைந்ததாக கூறியுள்ளனர்.
விதிவழுவிய முறையில் வணங்கும் இந்துக்களான, கிருத்துவர்கள், இசுலாமியர்கள் போன்றோர் கேட்ட"வேதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதா?

பகவத்கீதைதான் உயரியதா?கீதையில் சொல்லிவிட்டால் நாம் எல்லாம் அதை பின்பற்ற வேண்டுமா?இதுபற்றி ஏதேனும் தெளிவான கருத்து கிடைக்குமா?வேதங்களைவிட பகவத் கீதை முக்கியமா?எதற்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் தரவேண்டும்? என்று பற்பல கேள்விகளுக்கு இப்பதிவுஉபயோகப்படும் என நம்புகிறேன்.


"அனைத்து அறநூல்களினின்றும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த கருப்பஞ்சாறு ஸ்ரீமத்பகவத்கீதை.எண்ணற்ற அறநெறி நூல்களின் ஒரு கருவூலம் இதுவே எனினும் மிகையன்று.கீதையை ஒருவன் நன்கு தெளிவாகப் புரிந்துகொள்வாயானேயானால் அவனுக்கு எல்லா அறநூல்களின் அறிவும் தானேவந்தமையும்.வேறு ஒரு முயற்சி தேவையில்லை."


"ஸர்வ ஸாஸ்த்ரம்யீ கீதா (பீஷ்ம - 43/2) - அனைத்து அறநூல்களையும் தன்னுள் கொண்டது கீதை என்றல்லவா ஸ்ரீமகாபாரதம் பகரும். இங்ஙனம் கூறுவதும் போதாது.ஏனெனில் அனைத்து நூல்களும் வேதங்களின்றும் தோன்றியவை; வேதங்களோ ப்ரும்மதேவனின் முகத்தினின்றும் வெளிவந்தவை. ப்ரும்மதேவனோ பகவானின் உந்தித்தாமரையிலே உதித்தவர். இவ்வாறு ஸாஸ்த்ரங்கட்கும், ஸ்ரீபகவானுக்கும் இடையே பெருத்த இடைவெளி உள்ளது.

ஆனால் கீதையோ பகவானின் திருமுகத்தாமரையினின்றும் வெளிப்போந்தது. ஆகவே இது அனைத்து சாஸ்திரங்களிலும் மேம்பட்டது எனின்மிகையாகாது.


ஸ்ரீபகவான் வேதவ்யாஸரே கூறுகிறார்---

கீதா ஸூகீதா கர்தவ்யா கிமத்யை ஸாஸ்த்ரங்க்ரஹை:யா ஸ்வம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநி: ஸ்ருதா
(மஹா. பீஷ்ம. 43/1)


"கீதையை நன்கு கேட்டு, படித்து, பாடி பிறருக்குக் கூறி மனதில் தேக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.பிற நூல்கள் எதற்கு?ஏனெனில் இது பகவான் ஸ்ரீபத்மநாபனின் திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்ததல்லவா?

கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. சாஸ்திரங்களோ கங்கையில் நீராடுவதன் பயன் முக்தி என்கின்றன.கங்கையில் நீராடுபவன் என்னவோ முக்திபெறலாம். பிறரை கரையேற்ற இயலாது.

ஆனால் கீதையாகிய கங்கையில் மூழ்கி எழுபவன் தானும் முக்திபெற்று பிறரையும் முக்தி பெறவைக்கிறான். கங்கை பகவானின் திருவடித்தாமரையிலே தோண்றினாள்.ஆனால் கீதையோ பகவானின் திருமுகத்தாமரையினின்றும் தோன்றியது.

கங்கையோ தன்னைத் தேடிவந்து நீராடுபவனையே முக்திபெறச்செய்கிறது. ஆனால் கீதையோ வீடுதோறும் சென்று அங்குள்ளோர்க்கு முக்தி வழியைக் காட்டுகிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறப்புடைத்து.
கீதை காயத்ரியை விடவும் சிறந்தது. காயத்ரியை ஜபிப்பவன் முக்திபெறுகிறான். உண்மைதான்.அவன் மட்டுந்தானே?

ஆனால் கீதையைப் பாராயணம் செய்வோன் தானும் வீடுபேறு பெற்று பிறனும் வீடுபேறு பெற அருளுகிறான்.
முக்தியளிக்கும் பகவானே அவனைச் சார்ந்தவனாகும் போது முக்தியைப் பற்றிக்கூற என்ன உளது?
அவனுடைய திருவடிகளிலே கிடக்கிறது முக்தி.முக்தியெனும் சத்திரத்தையே திறந்துவைக்கிறான். பகவானைவிட கீதையே பெருமையுடைத்து என்பது சரிதான்.

பகவான் கூறுவதையே கேட்போமே...
லீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்கீதாஜ்ஞாநமுபாஸ்த்ரிய த்ரிலோகத் பாலயாம்யஹம் (வாயுபுராணம்)

"கீதையை அண்டித்தானே நானே இருக்கிறேன்!அதுதான் எனது உயரிய மாளிகை. அதன் துணைகொண்டுதானே மூவுலகையும் காக்கிறேன்"


அன்பர்களே..
கீதையின் முக்கியத்துவம் புரிந்ததா?.....
நன்றி - 273005

நாம் அனைவரும் இந்துவே...


அரசியல் திரா'விடப்'ப் பெத்தடினாக ஊசியில் அடிக்கடி ஏற்றி தமிழர்களிடத்தில் பகவத் கீதையில் சொல்லப் பட்ட கருத்துக்கள் சூத்திரனான(!?) திராவிடனுக்கில்லை ஆரிய வந்தேறி பார்ப்பனக்கூட்டம் தமிழன் மேல் திணித்தது என்று ஜல்லியடித்து நடுநடுவே அவர்களுக்கு வசதியாக ஒன்றிரண்டு வரிகளை தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது

இத்தகைய திராவிடப் பெத்தடினை அடிக்கடி தமிழர்களிடத்தில் ஏற்றிவிடுவதால் தேசிய கஞ்சாவை அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

ஆனாலும் வேலைகள் பல இருந்தாலும் நாம் சில மணித்துளிகளையாவது செலவழித்து பகவத் கீதையினை பரப்பவேண்டியது கடமையாகும்.

இந்துமதத்தினை, அதன் நோக்கத்தினை முழுதாக புரிந்துகொள்ளாத அரைகுறைகள், இந்துமதம் எனபது என்னவோ நால்வகை வருணத்திற்கும் மற்றும் பஞ்சமர் என்று திரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்குமானது என்ற எல்லைகளுடன் நின்றுவிடுகிறார்கள்..

ஆனால் உண்மையில் இந்து என்பவர்கள் உலகிலேயே உயர் பிறப்பாகிய, உழைத்து வாழும், அடுத்தவன் வயிற்றை அடித்துப்பிழைக்காத, தகுதியின் மொத்த இருப்பிடமான பிராமணர்கள், எந்நேரமும் ரத்த வெறியோடு வெட்டு குத்து, போர் என்று இருக்கும் ஷத்ரியர்கள், அருளை நாடாது, இவ்வுலக வாழ்க்கைக்கு பயன்படுகிற பொருளை நாடும், அப்படி ஜடப்பொருலையே நினைத்ததால், ஜடபுத்தியே வலுத்து இருக்கும் வைசியர்கள், மற்றும் அடிமைத்தொழில் ஒன்றையே செய்ய இயலும் சூத்திரர்கள், பஞ்சமர்கள், கிருத்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், புத்த, சமண மற்றும் இன்னபிற மதங்களை பின்பற்றுபவர்கள் எல்லாரும் இந்துக்களே என்று ஆணித்தரமாக கூறிச்சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.

**** இல்லாத காரணத்தினால் சிலர் இதை வெளியிட/ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்.
ஆனால் உண்மையைச் சொல்வதுதானே நமது கடமை...

சிலர் ஈசன் என்பார், சிலர் ஈசா நபி என்பார் சிலரோ இயேசு என்பார்.
பெயரில் என்ன இருக்கிறது. நாம் அனைவரும் வணங்குவது பரம்பொருளைத்தானே...

பகவான் என்ன சொல்லியுள்ளார் என்று பார்த்தோமானால்.....
கீதையின் ஒன்பதாவது அத்யாயமான "ராஜவித்யா ராஜகுஹ்யயோகம்"ல் 23ம் பாடலில்

யேsப்யன்யதேவதா பக்தா யஜந்தே ஸ்ரத்தயாsந்விதா:தேsபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்

வரிக்கு வரி அருஞ்சொற்ப்பொருள்

கௌந்தேய - குந்தியின் மைந்தா - அர்ஜூன!
ஸ்ரத்தயா அன்விதா - சிரத்தையோடுகூடிய
யே பக்தா - எந்த பக்தர்கள்
அன்ய தேவதா: அபி - மற்ற தேவதைகளையும்
யஜந்தே - வணங்குகிறார்களோ
தே அபி - அவர்களும்
அவிதி பூர்வகம் - விதி வழுவியர்களாய்
மாம் ஏவ - என்னையே
யஜந்தி - வணங்குகிறார்கள்.

சரி இதன் முழுமையான விளக்கப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்குகிறார்கள்.

விரிவாக்கம்:

சிரத்தையோடு இருத்தல் என்பது ஆஸ்தீக புத்தியுடையவராயிருத்தல் அல்லது தெய்வம் துனைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம்.
அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.

அதாகப்பட்டது,
தெய்வம் உள்ளது, அது நமக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கை
இருக்கும்எந்த ஆத்திகரும் தன்னையே வணங்குவதாக கூறுகிறார் பகவான்.
பின்பற்றும் விதிகள் எதுவாய் இருந்தால் என்ன?
பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும் கரைகானாத கடல் அல்லவா இறைவன்.
புண்ணிய நதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன.அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். ஆகவே கடவுளை அடையத்தகாதவர் எவருமில்லை..

ஆகவே மனிதர்கள் ஜாதி மதம் என்று வித்யாஸங்கள் பல இருந்தாலும் அனைவரும் இந்துவே.அனைவரும் வணங்குவது பகவான் கிருஷ்ணனையே.
பகவான் சொன்ன வழியில் நடக்காதவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால்..

9:11
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாச்ரிதம்பரம்
பாவம ஜானந்தோ மம பூதமஹேச்வரம்.
அதாவது...
என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாய்யிருப்பதையும் அறியாதமூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.

அடுத்த பாடலிலே(9:12) அவர்களது இயல்பையும் கூறுகின்றார்.அது..
வீண் ஆசையுடையவர்கள், பயன்ப்டாச் செயலாளர்கள், கோணலறிவுடையவர்கள், விவேகவில்லாதவர்கள்மயலூட்டுகின்ற ராக்ஷச அசுர இயல்புடையவர் ஆவர்.

இறைவன் என்பவன் அனைத்தையும் கடந்தவன்.அதாவது
கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை.
ஜடாகாசத்தை எப்பொருளும்சிதைப்பதில்லை.
பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது.
இன்னும் கேட்டால் இவ்வுலகில் இருக்கும் அனைத்திலும் இறைவன் இருக்கிறான்.அவனுக்கு எல்லாம் ஒன்றே..
ராமஸாமி செருப்புஸாமியால் கல்ஸாமியை அடித்துவிட்டதாக சில அறிவிலிகள் பிதற்றவும் செய்கின்றனர்.ஆனால் பகவான் அனைத்தையும் கடந்தவராயிற்றே..அவர் கருணைக்கடலல்லவா?
தலையில் நர்த்தனம் ஆடியே கொன்றாலும், காளிங்கன் கேட்டவரத்தைக் கொடுத்தவராயிற்றே..
அவர் புஷ்பத்திற்கும் செருப்புக்கும் வித்யாஸம் பார்ப்பாரா என்ன?
அதனேலேயே ராமஸாமிக்கு சொர்க்கத்தைக் கொடுத்து, மேலும் பூலோகத்திலே மானுடர் மூலமாக சந்தன அபிஷேகம் அணிவித்த கருணைக்கடலல்லவா அவர்.

பகவானே கூறிவிட்டால் அதற்கு மறுபேச்சேது.
ஆகவே பாவிகளே..மனந்திரும்புங்கள்.

உங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என்ற அச்சமா?கவலைவேண்டாம்.

"பகவான் இப்படி சொல்லியிருக்கிறார், ஆகையால் நீங்களும் இந்துதான், இதை நீங்கள்
ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.ஆனால் மதிமயக்கத்தின் காரணமாக இதை
நீங்கள் ஏற்க மறுத்தாலோ அல்லது ஏதேனும் சந்தேஹம் இருந்தால் மட்டும் பதில் கடிதம்
அனுப்பவும்".
என்று அனானி கடிதத்தை எழுதி இரண்டு மாதங்களுக்கு முன் போப் முதலான மதத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
ஒரு பதில் கடிதம் கூட கானோம்.

நீங்கள் எந்த வழியினைப் பின்பற்றினால்தான் என்ன?
புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்யாஸம் கண்டுபிடிக்கமுடியாது.
அதுபோல பக்தி எனும் புயற்காற்று அடிக்கும்போது அவனிடம் ஜாதிமத பேதம் இருக்கமுடியாது.

உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் வழுவிய விதியைக் கொண்ட கிருத்துவம் மற்றும் அவனின் எதிரியாய் நினைக்கும் இசுலாம் போன்ற முறையை பின்பற்றாமல்,
நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழும் இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து திருந்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,

தொல்காப்பியம் வருணபேதத்தின் ஊற்றுக்கண்ணா?

குறிப்பு : இது ஓர் எதிர்வினைப் பதிவானாலும் விவாதப் பதிவல்ல, இது ஒரு விழிப்புணர்வுப் பதிவு.
மேற்கோள்கள் போன்றவற்றில் முடிந்தமட்டும் தமிழ் சொற்களை கொடுத்துள்ளேன்.

எச்சரிக்கை: இப்பதிவில் சாதிப்பெயர்கள் வெகுவான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உண்மையை சொல்லப்புகும் நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. யார் மனதையும் புண்படுத்தும்
நோக்கம் கடுகளவும் இல்லை. நடுநிலைவாதிகள், அப்பாவிகள் மனதை தேற்றிக்கொண்டு இப்பதிவை படிக்க வேண்டுகிறேன்.

தொடர்பான பதிவுகள்.
http://vittudhusigappu.blogspot.com/2006/09/blog-post_16.html
http://karuppupaiyan.blogspot.com/2006/09/blog-post_18.html
http://karuppupaiyan.blogspot.com/2006/09/blog-post_20.html


வருணபேதத்தின் ஊற்றுக்கண் தொல்காப்பியம், என்று பல இடங்களில் இருந்தும் மேற்கோள் எடுத்துக்காட்டி,
தொல்காப்பியத்தில் இருந்துதான் மநுநீதி தோண்றியது என்பது போன்ற பற்பல மாயா உலகத்தைக் காட்டி,
தமிழின்மீதும் தமிழரின் மீதும் பழியைச் சுமத்தும் வகையில் ஒரு பதிவை இட்டுள்ளார் அன்பர் விசி அவர்கள்.

தமிழ்ச்சொல் இருக்கிறதா?

அவர் சொல்லிய செய்தியிலேயே/தலைப்பிலேயே அவரின் சொன்ன செய்தியின் உண்மை/தரம் பல்லை இளித்துவிட்டதாக நினைக்கிறேன்..
ஊற்றுக்கண் சரி, தொல்காப்பியம்சரி, ஆனால் வருணபேதம் என்பது தமிழ்ச் சொல்லா?
தொல்காப்பியம்தான் ஊற்றுக்கண் என்றால், வருணம், ஜாதி போன்ற சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் இருக்கிறதா என சிந்தித்துப் பாருங்கள்.


வகுப்பு மற்றும் சாதி.

அப்பதிவின் ஆரம்பம் முதல் பின்னூட்டங்களின் முடிபு வரை, ஒரு சிலரைத் தவிர, சமுகம் என்று ஒன்று இருந்தால் அதில் பல்வேறு பிரிவினைகள் இருக்கச் செய்யும் என்ற செய்தியுடன் சாதியையும் சேர்த்து நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு சாதிக்கும், வகுப்பிற்கும் இடையேயான வேறுபாடு தெரியவில்லையா என்ன? அல்லது கண்ணிருந்தும் குருடராய், மூளையிருந்தும் மூடராய் கடைசி வரை இருக்க போகிறார்களா?

இங்கே பகுத்தறிவு வெங்காயம், வைக்கம் வீரர், தந்தை பெரியார். அவர்களின் கூற்றை மேற்கோள் கொடுக்க விரும்புகிறேன்.

"ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன.
அதாவது, சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும்.
சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது.
தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை,
அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது."

தொல்காப்பிய தொழில்முறை வகுப்புகள்
கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்ற வகுப்புகளை பிறப்பின் அடிப்படையில் எங்கேனும் வகுக்கப்பட்டுள்ளனரா?

தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அத்தனை வகை பெயர்களும் தொழில் தன்மையால் ஏற்பட்ட குறியீட்டு பெயர்களாகும். எங்காவது இந்த தொழில் செய்பவன் மற்றதொழில்களை செய்யக்கூடாது என்று தமிழில் கூறப்பட்டுள்ளதா? குயவர் முதல் மன்னன் வரை கற்றறிந்தோர் இருந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், ஏதேனும் உளறல்/வசவு உச்சரிக்கும் போது மற்றவன் அதைக் கேட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றவேண்டும்
என்று சொல்லியிருக்கிறதா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.


மநு (அ)தர்ம சாதி முறைகள்.
சரி, இப்போது மநுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.

விராத்ய பார்ப்பனனும் பெண்ணும் பெறும் பிள்ளை பூர்ஜ கண்டன், ஆவந்தியன், வாடதானன், புட்பதன், சைகன் என்று நாட்டுக்கேற்றவாறு பெயர்.
விராத்ய சத்ரியன் பெறும் பிள்ளை = மல்லன், நிச் விடயன், கரணகசன்
விராத்ய வைசியன் = சுதன்வா, ஆச்சாரி, காசேன், விசன்மா, மைத்திரன், சாத்தவன்.

அநுலோமர் - பிரதிலோமர்.
தம் வருணத்திற்கடுத்த, அடுத்த வருணத்துப் பெண்ணிடம் பெறும் பிள்ளைகள் அநுலோமர்.
பார்ப்பன + வைசியப் பெண் = அம்பட்டன்
பார்ப்பன ஆண் + சூத்திர பெண் = நிடாதன்/பாரசவன்
சத்ரிய + சூத்திர = உத்கிரன்.

சத்ரிய, வைசிய சூத்திரன் தம் மேல் வருணத்துப் பெண்ணை மனைவியாகக் கொண்டு பெறும் பிள்ளை - பிரதிலோமர்.

சத்ரிய + பார்ப்பன = சூதன்
வைசிய + பார்ப்பன = வைதேகன் (வைதேகி என்ற பெயருக்கு இதனுடன் தொடர்புண்டா எனத் தெரியவில்லை)
வைசிய + சத்ரிய = மாகதன்
சூத்திரன் + பார்ப்பன = சண்டாளன்.
சூத்திரன் + சத்ரிய = சாத்தா
சூத்திரன் + வைசிய = அயோகவன்

பார்ப்பன + அம்பட்ட = ஆபிடன்
பார்ப்பன + உத்கிர = ஆவிரதன்
பார்ப்பன + அயோகவப் = திக்வணன்
சூத்திரன் + நிடாத = குக்குடகன்.

அநுலோமர் உயர்வு, பிரதிலோமர் தாழ்வு
அநுலோமர் தாயின் சாதி, அவர்கானவை தாய்சாதி சமஸ்காரங்கள்.
பிரதிலோமர் சண்டாளன், சாத்தா, அயோகவன் ஆகியோர் அறப்பணி ஆற்றுதல் கூடாது.
பார்ப்பனனின் அநுலோமப் பிள்ளை வேள்வித் தவங்களால் சிறப்புப் பெறுவான்.
பார்ப்பனனின் சந்திரிய, வைசிய அநுலோமர் உபநயன உரிமையுள்ளவர், சூத்திரப் பெண்
பெறும் அநுலோமர்க்கு அவ்வுரிமை இல்லை.
பார்ப்பனன் மணம் புரியாது சூத்திரச்சியுடன் பெறும் அநுலோமர், பார்பனத்தியை மணம் புரியாது சூத்திரன் பெறும் பிள்ளை இருவருக்கும் உபநயன நற்கருமங்கள் ஆற்றும் உரிமை இல்லை.

சண்டாளச் சாதிகள்.
நிடாதன் + சூத்திர = புற்கசன்
நிடாதன் + வைதேக = ஆகிண்டிகன்
நிடாதன் + அயோகவ = மார்க்கவன் (இவன் ஆர்யவர்த்ததில் செம்படவன் எனப்படுவான்)

வைதேகன் + அம்பட்ட = வேணன்
வைதேகன் + அயோகவ = மைத்திரேயன்(குடும்பாண்டி எனவும் அழைக்கப்படுவான்)
சாத்தா + உத்கிர = சுவபாகன்.

சண்டாளன் + நிடாத = அந்தியாவசாயி

சண்டாளன் + வைதேக = பாண்டு

சண்டாளன் + புற்கவ = சோபாகன்

தஸ்யூ(திருடன்) + அயோவக = சைந்திரன்

ஆபீரன், ஆவிரதன், திக்வணன், புற்கசன், குக்குடகன், சுவபாகன், வேனன் ஆகியோர் அந்தராளர் சாதியார்.

அம்பட்டன், உக்கிரன் ஆகிய அநுலோமர், சாத்தா வைதேகன் ஆகிய பிரதிலோமர்
அனைவரும் பாகியர்(தீண்டத்தகாதவர்) அநுலோமர், பிரதிலோமர் கூடிப் பெறுவசரும் அவ்வாறே.

சண்டாளர் தொழில்:

இழிபிறப்பாளன் ஒருவன் பார்ப்பனப் பணியைப் புரியும் போதும் அவன் இழிபிறப்பாளன் தான்,
இழிதொழில் யாது புரிந்தாலும் பார்ப்பனன் எப்போதும் இழிபிறப்பாளன் ஆகான். அவன்
பிறப்பு உயர்பிறப்புதான் பிரம்மனின் ஆணை அவ்வாறு.

என்று பிறப்பின் அடிப்படையில் சாதியை சொல்லியுள்ளார்கள். இது மட்டுமா,
இன்னும் சண்டாளர் குணம், சண்டாளர் வாழ்க்கை, மொழி, நாடு போன்ற சமத்துவ கொள்கைகள் மநுவில் இருக்கின்றன.


தமிழகத்தில் இளவரசரைத் தாக்க வரும் மத யானையை வேலெறிந்து, இளவரசரைக் காப்பாற்றும் ஒருவன், கைக்கோளப் படையில் சேர வாய்ப்புண்டு. அதில் பணிபுரிவதால் கைக்கோளராவான். இதே போன்று முத்திரையர் என்ற படைப்பிரிவும் உண்டு
ஆனால் மநு அப்படியா சொல்கிறது.


தொல்காப்பியத்திலிருந்து மநு தழுவப்பட்டிருந்த்தால்...
இந்த பதிணென் வகுப்புக்களுக்கு ஈடாக ஏதேனும் சாதிப்பெயரை எடுத்துக்கூறுங்களேன்.

பொய்யும் புரட்டும்:
இத்தகைய புரட்டுக்கள் ஒன்றும் தமிழர்க்குப் புதிதல்ல
இந்த பதிணென் வகுப்புகளை பலபட்டடை சாதிகள் என்று அதற்கு பொருளும் கொடுத்து, பொய்யும் புரட்டும் பனவனுக் குரிய என்பதை மெய்யாக்கும் விதமாக நெடுங்காலந்தொட்டே இத்தகைய திரித்தல் வேலைகளை (சமிபத்திய சீனிவாச ***** காலத்தில்கூட) செய்துகொண்டு வருகின்றனர்.

இங்கே அன்பர் விசி அவர்களின் பதிவில் செல்வகுமார் என்ற அன்பர் இட்ட
பின்னூட்டக் கருத்தையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

//வி.சி அவர்களே,
கீழ்க்காணும் கருத்தை நான் ஓரிடத்தில் எழுதியுள்ளேன். பேர் எழுதாத ஒருவர் ஆங்கிலத்தில்
உங்களுக்கு எழுதியுள்ளதைப் பாருங்கள். அவருடைய கூற்றுதான் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது.
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளன என்பது மிகத்தெளிவாக உணரப்படுவது (இரா. இளங்குமரன் அவர்கள் தெளிவாக ஒரு சிலவற்றை எடுத்துக் காடியுள்ளார்.). தொல்காப்பியத்திலே உயிர்களின் பகுப்பு என்னும் பகுதி மிகச் சிறப்பானது. அதிலேயே இடைச்செருகல்
இருப்பதை இரா.இளங்குமரன் ஐயம் திரிபற விளக்கியுள்ளார். அவர்போல் ஆழமான அறிவு இல்லாதவரும் மிக எளிதாக இடைச்செருகல்களை அறியலாம். தொல்காப்பியம் உங்களிடம் இருந்தால்
நூற்பாக்கள் 571 முதல் 613 வரை படித்துப் பாருங்கள். அவைகளில் உயிர்ப்பிரிவுகள், விலங்குகளில் ஆண் பெண் பெயர்கள் பற்றியெல்லாம் கூறிவந்தவர், திடீர் என்று 614-615 ஆம் நூற்பாக்களில் அந்தணர்க்குரியன, அரசர்க்குரியன என்கிறார். இன்னும் நூற்பா 631 வரையிலும்
சில தொழிற்குலங்களுக்கு உண்டான சில செய்திகளைக் கூறுகின்றார். பின்னர் திடீர் என்று மீண்டும் 630 ஆம் நூற்பாவில் புறக்காழெனவே புல்லென்ப என்றும் 632 ஆம் நூற்பாவில் தோடே மடலே
என்று புல் வகையின் உறுப்புகள் பற்றியும் மர வகை உறுப்புகள் பற்றியும் கூறி 635 ஆம் நூற்பாவில் அப்பகுதியை முடிக்கின்றார். 615-629 முடிய உள்ளன இடைச்செருகல்கள் என்பன தெள்ளத்தெளிவாக
உணரலாம் (மொழி நடையும், கருத்துக்கள் அமைப்பும் முறையின்றி இருப்பதும் உணரலாம்). தமிழர்களிடையே தொழில்வழி இனங்களும் குலங்களும் இருந்திருக்க வேண்டும், ஆனால், பிறப்படிப்படையில் சாதிகளும், அவைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளும் இருந்ததில்லை
என்பது நான் புரிந்து வைத்துள்ளது. மாற்றுக் கருத்துக்கள் வலுவாக இருந்தால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்வேன். இடைச்செருகலாக உள்ள தொல்காப்பிய நூற்பாக்களிலும் (இவை 9-10 ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று படித்த நினைவு) பிறப்படிப்படையில்
சாதிகள் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனு நீதி நூலையும்
பிற பல ஸ்ம்ருதி நூல்களையும் படித்துப்பாருங்கள், பின்னர் அது போல தமிழில் ஏதேனும் நூல்கள் உள்ளனவா என்று காட்டுங்கள. ஊற்றுகண் தொல்காப்பியமா? இல்லை என்பதை ஊன்றிப் படித்தீர்களானால் உணரலாம். இடைச்செருகல் நூற்பாக்களைக் கொண்டு உண்மையைத் திரிக்காதீர்கள்.
C.R.Selvakumar //


இத்தகைய திரித்தல் செயல்களைக் கண்டு, அயர்ச்சியடையாமல் ,
உண்மைகளை உலகுக்கு தெரிவிப்பது நம் கடமையாகும்.

"இருட்டினில் வாழும் இதயங்களே, கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்."
நன்றி,

மதுமிதா அவர்களின் ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: பூங்குழலி

வலைப்பூ பெயர் : குழப்பம்

உரல் : http://kuzhappam.blogspot.com/

ஊர்: புதுச்சேரி மற்றும் சென்னை.

நாடு: இந்தியக் குடியரசு

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
தான் தோன்றி தனமாய் வலைமேய்ந்து கொண்டிருந்தபோது, எதேச்சையாய் கண்ணில்பட்டது.... நம்மிடையே பெரிய அளவிலே பேசப்பட்ட கற்பு விவகாரம், அதற்காக தனி பதிவு பதியப்போய், தமிழ்மணம் அறிமுகமாகி வெகுவிரைவிலே தமிழ்மண விவாதங்களைக் கண்டவுடன், தற்போதைய முக்கியத்தேவை எதுவெனக் குழம்பி குவியம் மாறி, அலையில் அடித்துச் செல்லப்பட்டு....ம்ம்...
வலைப்பூ அமைப்பு, அதன் தொழில்நுட்பம் மற்றும் நல் அறிமுகம் கொடுத்தவர்கள் என்று பார்த்தால் முத்து(தமிழினி), குமரன், இராகவன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

நவம்பர் திங்கள் 2005

இது எத்தனையாவது பதிவு: 21

இப்பதிவின் உரல்: http://kuzhappam.blogspot.com/2006/05/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
புதிதாய் ஒன்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, வரம் வாங்கிய பூசாரி, ஒலிவாங்கி (அதாங்க மைக்) கிடைத்த அரசியல்வாதி ஆகியோர்போல் தனக்கென ஒரு கருத்து ஏற்பட்டு அதைக்கேட்க ஆளில்லாதபோழ்து வசமாய்க் கிடைத்தது வலைப்பூ.
எத்தனை பேர் விசனப்பட்டார்களோ...

சந்தித்த அனுபவங்கள்:
அடு(ட)க்குமுறை நிறைந்த நமது சமுதாயத்தில், இவளென்ன சொல்வது, நாமென்ன கேட்பது என்றல்லாமல் மதித்து பதிலாற்றக்கூடியவர்கள் உள்ளாரென கண்டறிந்தது, இது பிஞ்சிலே பழுத்தது இல்லை இல்லை வெம்பியது என்ற நற்பெயர் பெற்றது..

பெற்ற நண்பர்கள்:
நிறைய பேர், வலைப்பூ பதியும் அனைவரையுமே நான் தோழர்/தோழிகளாகவே கருதுகிறேன், இது நழுவுவதற்காக சொல்லப்பட்ட கருத்தல்ல....

கற்றவை:
தன் கட்டுப்பாடில்லாத சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமானது, நடைமுறையில் உணர்ந்தது...
ஒரு மூளை சிந்தித்து எழுதுவதை, படிக்கும் மூளை எவ்விதமெல்லாம் வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கமுடியும் என்பது பின்னூட்டகளின் மூலம் அறிந்தது...
மனமாற்றத்திற்கும், அழித்தொழிப்பதற்கும் உள்ள வேறுபாடு...


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
politically correct எனப்படுகிற வகையில் எந்தக்கருத்தை எழுதினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும், சற்றே தவறினால் தனிமனித தாக்குதல் நிச்சயம்.

இனி செய்ய நினைப்பவை:
என் கடன் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டிருப்பதே....

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டில் கடைகுட்டி
படிப்ப(த்த)து : இளங்கலை அறிவியல் (வேதியியல் துறை).
மதுரை தமிழ்சங்கத்தின் தேர்வில் பள்ளியில் முதல் ஆளாய் வரப்போய், தமிழார்வமும் தொற்றிக்கொண்டது.
நாளையென்று தள்ளிப்போடும் சோம்பேரி..
இலட்சியக் கனவுகளின் தொழிற்சாலை


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
எந்த பிரச்சினைக்கும் தீர்வுகள் கறுப்பு அல்லது வெள்ளை என்ற விளிம்பு நிலையில் தேடும் நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது. சாம்பல் நிற யானை பற்றிய விவாதங்கள் நிறைய வருவது தமிழ்மணத்தில் அதிகரித்துள்ளது. அடுத்தவர் தன்மானத்தை பாதிக்காத வகையில் விவாதங்கள் செய்ய முயற்சி செய்கிறேன்.

அனைவரின் ஆதரவைத் தேடி
பூங்குழலி.

அகப்பட்டேன் கிடந்துழல அகப்பட்டேன்...

தினம் ஒரு பதிவு போடாவிட்டால் கைகள் நடுங்குதல், பின்னூட்டங்களை படிக்க பயப்படுதல்,காலை எழுந்ததும் தமிழ்மணத்தில் முழித்தல், அரைத்தூக்கத்தில் பின்னூட்டங்களை மாற்றியிடல், பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல், ஆபீஸ் கணினியில் Alt+Tab ம், வீட்டுக்கணினியில் F5 பட்டன்களும் தேய்ந்திருத்தல், விளக்கப்பதிவென வெளங்காப்பதிவிடல், IP அட்ரசை அடிவரை தோண்டுதல், பார்க்குமிடமெல்லாம் +/- தேடுதல் போன்ற அனைத்து வியாதிகளும், மேலும் பதிவுகளைப் படிக்கும்போதே ஏற்படும் மடக்கிட்டானோ என்ற வயிறு கலக்கும் பயம், தெரிஞ்சிருக்குமோ என்ற வெட்கம், கண்டுபிடிச்சுட்டாங்களோ என கூனிக்குறுகும் அவமானம், கேட்டுட்டானே என தலைக்கேறும் கோபம், ஒத்துக்கவே மாட்டேங்கறானே என வரும் வெறுப்பு, சொன்னதை மாத்தி சொல்லறானே என மூக்கு நுனியில் எரிச்சல், அடக்கமாட்டாமல் வரும் அகப்பாவச் சிரிப்பு போன்ற அனைத்து தொந்தரவுகளை ஏற்கனவே பெற்றிருக்கும் எனக்கு தமிழினியின் சங்கிலிப் பதிவை படித்தவுடன், கானுழைத்துக்கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போலானேன்.

விரும்பிக்கேட்கும் பாடல்கள்.

ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...
"வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்" என்ற வரிகளுக்காகவே..

மயிலிறகாய் மயிலிறகாய்... நிஜமாகவே நெஞ்சை வருடுகின்றது. ஒருவேளை எம்பெருமானின் மயிலிறகாய் இருக்குமோ?

வசிகரா என் நெஞ்சினிக்க..
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்...

உயிர்/உடல் வாழிடங்கள்..

தாயின் கருவறை
அம்மா அப்பாவின் இதயங்கள்
பொதுகே
சென்னைப்பட்டினம்
(இருந்தது இரண்டே இடம்,
இப்படித்தான் சொல்லமுடியும்)

முன்மாதிரியாய் நான் எடுத்துக்கொள்பவர்கள்.

அன்னை தெரசா

முத்துலட்சுமி
அன்னை (ஆரோ)
ஜெயலலிதா - ஆனால் ஓட்டு யாருக்கு என்று சொல்லமாட்டேன்.

சான்றோர்

காமராசர்
அப்துல் கலாம்
அவ்வையார்
உ.வே.சா


என் நெஞ்சில் குடிகொண்டுள்ளோர்..


மயிலம் முருகன்
திருவகீந்தபுரம் தேவநாத சுவாமி
இவர்கள் இருவரும் எனது தாய் தந்தை மூலம் அறிமுகமானார்கள்.
இவர்களைஅடிக்கடி இல்லாவிட்டாலும் பூசம், உத்திரம் மற்றும் சித்திரை முழுநிலவுகளில் பார்த்துவிடவேண்டும்.என்னதான் தேவநாதன் குலதெய்வமானாலும், முருகனே என் உள்ளங்கவர் கள்வன்
திருவள்ளுவர்
பாரதி

இவர்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை.

கலையுலகில் பிடித்தவர்கள்.
இளையராஜா
நந்தா சூர்யா
ச்ரிதேவி - மூன்றாம் பிறையில் படம் முழுக்க நன்றாக நடித்த இவரை மிகப் பிடிக்கும்
விவேக் நகைச்சுவை

பிடித்த படங்கள்

மூன்றாம் பிறை
மகாநதி -முக்கியமாய் நாயகன் தன் பெண்ணை மீட்டெடுக்கும் காட்சி, மற்றும் அப்பெண்ணின் தூக்க உளரல் என்னை பாதித்தது. கொலைவெறி என்று சொல்லமுடியாது, பார்த்த ஓரிரு நாட்களுக்கு கைப்பையில் பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு அலைந்ததென்னவோ உண்மை.
முள்ளும் மலரும்
அழகி - என்னை பொருத்திப் பார்த்துக்கொன்டதால் எனக்கு பிடித்ததில் ஒன்றாயின.


பிடித்த செயல்கள்.

சமையல் - (உண்மைதானுங்க).. மற்றும் காலி செய்தல்..
கவிதை என்ற பெயரில் கிறுக்குவது (மற்றவரின் கருத்து தெரியாததால் அடக்கி வாசிக்கிறேன்.)
தமிழ்மணத்தில் புலம்புவது.
அண்ணனின் பைக்கில் சற்றே ஊர் சுற்றுவது.

டிவி பார்க்க நேரிடின் பார்க்கும் நிகழ்ச்சிகள்

Pogo
இந்தியா விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ( குளிக்காமல்?)
சன் மியூசிக்
எங்கள் வீட்டு டிவியின் 24ம் அலைவரிசை :)

பிடித்த உணவு..

இயற்கையின் படைப்பில் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே என எந்த வேறுபாடும் பார்க்கமாட்டேனாக்கும்..
ஆனாலும்...

ஐஸ் பிரியாணி (அதானுங்க பழையது + சிறிது தயிருடன்..) + வறுத்த மோர் மிளகாய்
வத்தக் குழம்பு
கோழி65
மீன் எந்த விததிலும், முக்கியமாய் சங்கரா?


அடிக்கடி புரட்டும் புத்தகங்கள்

ஆங்கில அகராதி.
இட்லரின் சுயசரிதை - ஒண்ணுமே புரியமாட்டேங்குது.. ஆங்கில அகராதி கிழிந்தே விட்டது
பைபில்

பகவத் கீதை
கடையிரன்டும் ஆய்வு நோக்கில் தமிழில் படித்துக்கொன்டிருக்கிறேன்.
தமிழில் திருகுரான் கிடைக்குமா?

விரும்பும் நிகழ்வுகள்.

மயிலம் பயணம்.
முருகனின் மீதான ஒரு காதல் காவியம்..
கூர்க் சுற்றுலாப் பயணம்.
அண்ணனை மிரளவைக்கும் அளவிற்கு ECRல் பைக் பயணம்.


அடிக்கடி பார்க்கும் வலைத்தளங்கள் (தினமும் எல்லாம் முடியாதுங்க..)
ஜிமயில்
google தேடல்
தமிழ்மணம்
எனது பக்கம்

அழைக்க விரும்பும் நால்வர்
துளசி அவர்கள்
மதி அவர்கள்
உஷா அவர்கள்
"அவர்கள்" தான் போடனும், அப்புறம் என்னை யாராவது அக்கா என்று சொல்லிவிட்டால்..

மருள் நீக்கி -
தமிழ் பாடல்கள் எழுதும் இவருக்கு எனது வணக்கங்கள்.
நல்லவன் மருள்நீக்கி இருவரா ஒருவரா எனத் தெரியவில்ல.
வெகுசிக்கிரமே தினமலரில் பெயர் வந்துவிட்ட பெருமைக்குரியவர்.
(எனதெல்லாம் தினமலரில் போடும்படியாகவா இருக்கிறது..?)



இதோ என்னப் பற்றி சொல்லியாகிவிட்டது, இதெல்லாம் எனது உடனுறை மாமித் தோழிகள், உறவினர்கள் படிக்க நேரிடின் என்னாகுமோ, குட்டு வெளிப்பட்டுவிடுமோ, அடங்காப் பிடாரி என்ற அவச்சொல் ஏற்படுமோ, சமுகம் விட்டு ஒதுக்கி விடுவார்களோ? ஏதேனும் முகமூடி போட்டுக்கொண்டு ஆசிட் முட்டை வீசிவிடுவார்களோ என்ற பயம், மன நடுக்கம், கை கால் உதறல், என்னமாதிரியான பின்னூட்டக் கேள்விகள்/பதில்கள் வரும், அல்லது சென்ற பதிவிற்கு தமாஷ் பாண்டி மற்றும் குமரன் அவர்களின் வாக்கு வேண்டி வந்த பின்னூட்டங்களைத் தவிர ஒன்றுமே வராததால் ஏற்கனவே ஏற்பட்ட மனக்குழப்பம் போல் இப்போதும் ஏற்படுமோ? என்ற பயம் உள்ளது.

(பி.கு. எதையுமே நான் வரிசைப் படுத்தவில்லை, அதனால் வரிசை எண் போடவில்லை. அனைத்தும் ஒன்றே.)

உதறலுடன்,
பூங்குழலி

அந்த மாநாடும், இந்த குழப்பமும்

இதற்கண் , இந்தப் பதிவு

//பாரதிக்கு தாசன்கள் மட்டுமே வர முடியும். ஆனால் பாரதி வர முடியாது. //

இதை அவர்கள் பாவேந்தரைப் நினைத்து கேட்டார்களா எனத் தெரியவில்லை.
ஆனாலும் பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணியோ, அல்லது அதன் முழு அர்த்ததையும் உணர்ந்தவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்துவிடலாம்...

சாதி இந்துக்களின் பெயர் சூட்டும் முறை...

பிராமணனுக்கு மங்களம், சத்ரியனுக்கு பலம், வைசியனுக்கு செல்வம், சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும் பெயர்களைச் சூட்டவேண்டும்.

பிராமணன் சர்மா எனும் மேன்மையைக் குறிக்கும் (பெயரில் மட்டும்), சத்ரியன் வர்மா எனும் பயத்தைக் குறிக்கும் பெயரையும், வைசியன் பூபதி எனும் வளத்தைக் குறிக்கும் பெயரையும், சூத்திரன் தாஸ் என்னும் தன் அடிமை பணியைக்குறிக்கும் பெயரையும் தன் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவர் சொன்னதின் அர்த்தம் என்ன என்பதை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

//அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள்//


மீன் கழுவுவதை அவர் பார்த்து மிகத் துயர் உற்றார் எனச் சொல்லியிருகிறார். அவர் துன்பத்தில் நானும் பங்குகொள்கிறேன்.
பிராமண உனவு பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்துவிடலாம்.

பிராமண உனவு:

படைப்புகள் அனைத்தும் உயிர்களுக்கு உண்வாகத் தக்கன, புல் முதலியவை மான் முதலியவற்றிற்கும், மான் முதலியவை புலி போன்றவற்றிற்கும்,யானை முதலியவை சிங்கம் முதலியவற்றிற்கும், மீதும் பிறவும் மனிதருக்கு உணவு ஆகும்.

கொல்லத்தக்கனவும், உண்ணத்தக்கனவும், படைத்தவர் பிரம்மா. ஆகவே நியதிப்படி, அன்றாடம் கொன்று தின்றாலும் பாவம் ஆகாது.
எனினும், யாகத்தில் மீதியான புலாலைஉண்பது தெய்வீகச் செயல். தம் இச்சையாய் கொன்று உண்பது ராட்சசச் செயல்.

இப்போது புரிந்திருக்குமே தெய்வங்கள் யார், ராட்சசர்கள் யார் என்று..
(பின் எப்போது இவர்கள் மரக்கறி உண்ணலானார்கள்? புத்தர் விஷ்னுவின் அவதாரமா என்ற பதிவிலே விளக்கமாகக் காண்போம்)


இப்போது தெரியுமே உரிமை இழந்த அவரின் மன வேதனை நியாயமானதுதானே...


தற்போது சமுதாயத்தில் உண்மையிலேயே சிறந்த பங்களிப்பை செய்து நற்பேறு பெற்றவர்களின் கருத்துகளைப் பற்றி எனது சந்தேகங்கள்.

பாரதி போன்று சிறந்த கவி யாரும் இல்லை. நிச்சயம் அவரும் சிறந்த கவிகளில் ஒருவர். இந்த கருத்தில் நானும் அவர்கள் கட்சி.
ஆனால் அவர் சொன்ன பாரதி இவரா?


செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்..
//சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர்;//
(இதற்கு ஆதாரம் எனக்கு அன்பர்கள் கொடுத்தால் மகிழ்வேன்.)

பார்ப்பன மாந்தர்காள்; பகர்வது கேண்மின்
நால்வகை சாதியை இந்நாட்டினில் நாட்டினீர்
காற்றும் சிலரைக் கடிந்து வீசுமோ?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?


இவர்கள் சொன்ன பாரதி மற்றும் கபிலர் இவர்கள்தானா? அல்லது அடுத்தாத்து அம்பிகளா?


நிச்சயமாக இந்த ஒழுக்கசீலர்கள் சொன்னது சோமபான உளரல் இல்லை.அவர் நன்கு கற்றறிந்தவர் ஆனால் எதைப்படித்துவிட்டு அவர் சொன்னார் என்றால்..

அச்வத்த: ஸர்வவ் ருக்ஷாணாம் தேவர் ஷீணாஞ் ச் நாரத:
கந்தர் வாணாம் சித்ரரத்: ஸித்தானாம் கபிலோ முனி:


"எல்லா மரங்களுக்குள் அரசமரம் நான் (புத்தர் ஞாபகம் வரவில்லை?). தேவரிஷிகளுக்குள் நாரதர் நான், கந்தர்வர்களுக்குள் சித்தரதனென்ற கந்தர்வன் நான், சித்தர்களுக்குள் கபில முனி நான்."

எதிர்த்து அழிக்க முடியாத எதையும் அணைத்தே அழித்துவிடும் மிகப் பெரிய பஞ்ச தந்திரங்களுள் ஒன்றைக் கையாள்வதற்காக அப்படி கூறப்பட்டுள்ளது எனத் தெரியாமல், அவர் சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்.

இதெல்லாம் பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள்..

(இங்கு, மன்னவன் சரியான பாடலுக்கு பரிசளிக்கிறான் என்றால் அதைப் பார்த்து மகிழும் முதல் ஆள் நான்" எனும் நற்கீரனின் உரையாடல்களை மனதில் நினைத்துகொள்ளவும்)

சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளுக்கு உரை எழுதியுள்ள திரு. சுஜாதா அவர்கள் யாரோ,

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பிராமணன் முதற்றே உலகு"



என்ற தவறான பாடலை பாடியபோது திருத்தியிருக்கவேண்டாமா?
அவர்தான் சொந்தபந்தம், பங்காளிகள் ஆகியோரைப் பார்த்த மகிழ்ச்சியில் சொல்லிவிட்டார் என்றால், இன்று வரை அதை திருத்தி வெளியிடாதது ஏன்?

சரி பரவாயில்லை ஆசைப்பட்டுவிட்டீர்கள், நானே உங்களுக்கு உதவுகிறேன்.

"அகரமுதல எழுத்தெல்லாம் வேத
பிரம்மா முதற்றே உலகு"


அவன் தேவையில்லை, பிராமணர்களே முக்கியம் என்றால்.

"அகரமுதல எழுத்தெல்லாம் வேத/ஆதி
பனவன் முதற்றே உலகு"



கலிங்கத்துப் பரணி படிக்காத காரிருள் இல்லை நீங்கள்.
உங்களுக்கு பனவன் என்றால் பிராமணன் என்று தெரியும் என்று நம்புகிறேன்.

மற்றபடி அந்த பாரதி, கபிலர் ஆகியோர் நான் சொன்னவர்களா அல்லது வேறு மனிதர்களா என்று சொன்னால் மகிழ்வேன்.

இப்படிக்கு,
நிரம்பிய சந்தேகங்களுடன்,
பூங்குழலி

எதை நோக்கிப் போகிறோம்?

இளைஞர்கள் கேள்விகேட்கும்போது, பெரும்பாலும் அது அப்படித்தான், இவையெல்லாம் ஆராயக்கூடாது, அனுபவிக்கவேண்டும் என்ற ரீதியில் பெரியவர்கள் பதில் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஒருவரேனும், "அது மனிதன் காட்டுமிராண்டிகளாய் இருந்தபோது எழுதப்பட்டது, அதில் சில தற்காலத்திற்கு ஒவ்வாதவை அல்லது நீ நினைக்கிற மாதிரியில்லை, அதன் உண்மைப்பொருள் இதுவே" என ஐயத்திற்கு இடமின்றி விளக்கவேண்டும்.

ஆனால் இங்கே தற்போது நடந்துகொண்டிருப்பது என்ன?

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்" என்ற சொற்றொடரை கேள்வி/சந்தேகம் கேட்டவனின் மீது மட்டும் மெய்ப்பொருள் காணச் சொல்கிறார்கள்.

"சாத்தான் வேதம் ஓதுகிறது" என்ற சொலவடை ஞாபகத்திற்கு வந்தாலும், இதைச் சொல்லி யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.

இன்னும் சில நேரங்களிலே,

"அன்பரே, இன்றைய பொழுது, உங்களின் வாழ்க்கையின் மிகமுக்கியமானது.உங்களின் தொழில்முறை அறிவை/அனுபவத்தை பெருக்கிக்கொள்ளுங்கள், இது போன்ற பதிவுகள் எழுத மற்றவர்கள் இருக்கிறார்கள்..." என்று அன்பரின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சுறுத்தல் கணையைத் தொடுக்கிறார்கள்..

யாருக்குத்தான் எதிர்காலத்தைப்பற்றிய உணர்வு இல்லை? அல்லது இது மாதிரி எழுத தனியாக கொம்பு முளைத்தவர்கள் இருக்கிறார்களா?

"நீங்கள் இதுமாதிரி எழுதுவீர்கள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. நிச்சயம் நாம் அனைவரும் மற்றவரின் கனவு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்து வாழவேண்டும்" என்ற ரீதியில் உத்வேகத்தினைக் குறைக்கும் அன்புச் சுரண்டல்கள்..

"எல்லாம் தெரிந்தமாதிரி பேசாதே.., இதுக்கெல்லாம் உனக்கு அனுபவம் பத்தாது.." என அடக்கு முறைகள்.

"பொம்பளையாளுக்கு ஸ்லோகமெல்லாம் தெரியனுமா?, சித்த சும்மா இருடீ". நாச்சுட்ட வடுக்களுடன் என் மனம்...

நிச்சயம், எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் யாரும் இல்லை. எந்த அகவையில் இருந்தாலும் கற்றது கை மண்ணளவு..


"பதிவைப் போடும் முன் நன்றாகப் படித்துவிட்டு போடவும்../என்ன ராசா இப்படி பண்ணிட்டியே?..." எனச் சொல்ல பெரியவர்களுக்கு எத்தனை உரிமையிருக்கின்றதோ.. அப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அல்லது விளக்கம் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது.

கடமைகளை தட்டிக்கழிக்கின்ற சமுகத்தில் கண்ணியமும், கட்டுப்பாடும் இருக்காது..

(எப்படியோ, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி எழுதியாகிவிட்டது..)

நடக்கப் பழகும் குழந்தையை, ஓடத்தெரிந்தவர்கள் எள்ளி நகையாடும் செயல்களும் நிகழ்கின்றன..

கனியிருப்பக் காய்கவர்ந்தால்...

இந்தியத் திருநாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

இளைஞர்களுக்கு காயடிக்கும் வேலையை தவறாமல் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளும், சமய குருமார்களும், 22 வயதிற்குமேலும் பிள்ளைகளை தன்னுடனே வைத்து குல விந்துவை பெறுக்கும் பெற்றோர்களும், நற்காரியத்தை தவறாமல் செய்கிறார்கள்.

முத்தமிழ் வித்தகரின் கட்சியில், 50 வயதுக்கு மேல் உள்ள முதுகுமரன் இளைஞர் அணி தலைவர்.

திறம்பட ஆட்சி நடத்தும் (ஜெயா டிவியில்) மற்றொரு பகுத்தறிவுக் கட்சியிலும், குடிதாங்கிகளின் கட்சியிலும், சீமான் வீட்டுக் கன்றுக்குட்டி இருக்கும் கட்சியிலும், இளைஞர் அணி, மாணவரணி என்பன பற்றி மூச்சே காணோம்.

அல்லது ஊடகங்கள் இந்த நற்காரியத்தை செய்கின்றன..

இவ்வளவு மக்கட் தொகை கொண்ட நாட்டில் மாணவர்களின் பலம் ஆண்மையிழந்துப் போய், சோற்றாலடித்த பிண்டமாகக் கிடக்கின்றனர்.

இளைஞர்களின் கேள்வி வேள்வியை ஆதரிக்காமல் அதை எதிர்க்கும் பெரியவர்களின் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களும் இளைஞர்களாய் இருந்தபோது இந்த நற்காரியத்தை செய்து விடப்பட்டவர்கள் தானே..

"இந்தப் புளுகு ஸ்கந்த புராணத்திலும் இல்லை" என்ற சொலவடையை வைத்திருக்கும் நாம்
இப்படியே விட்டுவிட்டால் வருங்கால சந்ததியினர் நம்மையும் சேர்த்து காறித்துப்பக் கூடும்.
நம் காலத்திலாவது புரட்சி ஓங்கட்டும்.

சுய சிந்தனையுடைய இளைஞர்கள் உருவாகட்டும்.தந்தையின் குலவிந்தினைப் பெருக்குவதிலும், கனவனுக்கு சந்ததியினை பெற்றுத்தரும் இயந்திரமாய் இருப்பதையும் விட்டுவிட்டு புதிய இந்தியாவைப் படைப்போம்.

"எனக்கு உத்வேகமுள்ள, சுயசிந்தனையுடைய 100 இளைஞர்களைக் கொடுங்கள். நான் நாட்டை புரட்டிக்காட்டுகிறேன்"

எனக் கேட்ட விவேகானந்தனின் பிறந்தாநாளான இன்று(JAN- 12)..

தேசிய இளைஞர் நாள்..

நன்றி,
பூங்குழலி

(பி.கு விதிவிலக்குகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

திருக்குறள் அசைவமா?

திருக்குறள் சைவமா? என்று கேட்டாலும் கேட்டேன்,(இன்னும் பதில் பதிவையே கானோம்?), நான் என்னவோ சைவ

சித்தாந்தத்திற்கு எதிரானவள் என்றும்,
திருக்குறள் சைவமாய் இருப்பதை இவள் விரும்பவில்லை எனவும்
மற்றவர்கள் தவறாய் நினைக்கும் தொனியில் பின்னூட்டங்கள் வந்தன...

வைணவச் சார்பு கொண்டேனோ எனவும் சிலர் ஐயுறலாம்...

தன்னை நடுநிலையாராகக் காட்டிக்கொள்வதில் யாருக்குமே ஓர் அலாதி விருப்பம் இருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதற்கண் இந்தப் பதிவு...




திருவள்ளுவர் தாம் இரண்டாயிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத்தெ ழுநூ றாண்டுகள் கழிந்த்ப்பின்
பரிமேலழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்


பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள்ளத்தின் திரையே ஆனது!
நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமேலழகர்


பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறமே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார் தெள்ளு தமிழர்
சீர்த்தியை திறம்பட எடுத்துக் காட்டினார்

பரிமே லழகர் செய்த உரையில்...
தமிழரைக் காணுமா றில்லை.. தமிழரின்
எதிர்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்.

வடநூல் கொண்டே வள்ளுவர் குறளை
இயற்றினார் என்ற எண்ன மேற்படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்
எடுத்துக் காட்டொண் றியம்பு கின்றேன்;

"ஒழுக்கமுடைமை, குடிமை" என்பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்
"தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடையராதல்"-
உரைதானா இது?
"ஒழுக்க முடைமை உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடையராதல்"
- தகும் இது;

குடிமை என்பது குடிகளின் தன்மையே!
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப் பிரிதல் இல்"
எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக..

நன்றாயம் நவில வந்ததென் எனில்
திருவள்ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழ் இனிது வாழ்கவே


அன்பர்களே,
இது என்னுடைய கருத்து அல்ல...
நம் புரச்சித் தலைவர் மன்னிக்கவும்,
புரட்சிக் கவிஞரின் பாட்டு இது.


வசவுகளை எனக்கும், பாராட்டுதல்களைப் புரட்சிக் கவிஞருக்கும் அனுப்பவும்.

பொறுமைக்கு நன்றி,
பூங்குழலி.

உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன் -- பதில்

பதிவுக்கு மிக்க (நன்றிக்கு எதிர்பதத்தைப் போட்டுக்கொள்ளவும்) முத்துக்குமரன்.

முதலில், தலைப்பை பற்றி ஒரு கருத்து.
நீங்கள் இதை கணக்குப் பாடம் என்று நினைத்து விட்டீர்களா?

நீங்கள் அப்படி எண்ண முயன்றால் அது ஒரு முடிவிலி.

///அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்துவிடும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்திற்கும் காரணங்கள் இருந்தன. அதைக் "குழந்தைத் திருமணம்" என்று எப்படியெப்படியோ திரித்து எதிர்த்து அக்காலத்தில் பெண்குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துவைத்து விடுவார்கள் என்ற அளவிற்குக்
கொண்டுபோனார்கள்.///



குழந்தைத் திருமணம் என்பதை தற்போதுள்ளவர்கள் திரித்துக் கூறுகிறார்கள்.
உண்மைதான் இப்பதிவைப் பார்க்கவும்.

(இது ஏதோ வரலாறு என நினைத்துவிடவேண்டாம்.
நீங்கள் அகவை 60 க்கு மேல் இருந்தால் அது உங்கள் அப்பாவின் காலம்.
அதற்கு கீழே என்றால் உங்கள் பாட்டனார், முப்பாட்டனார் காலம்.)


//ஏன் வயதுவந்தவுடன் திருமணம் செய்துவிடும் பழக்கம் வந்தது என்ற காரணங்களுக்குள் போகவேண்டாம் (இன்னும் சில விவகாரங்களுக்குள் போகவேண்டி வரும் என்பதால்). //

தயவு செய்து காரணங்களுக்குள் போகவேண்டாம்.
எனது வாயை பிடுங்கவேண்டாம்.


மிகக் குறுகிய வட்டத்திற்குள் கிணற்றுத்தவளையாய் இருக்காதீர்கள் முத்துக்குமரன்.

முன்காலத்தில் இந்தக் கடவுளர்+ கணக்கிலடங்கா கிண்ணர்கள், கிம்புருடர்கள் + கோடானு கோடி தேவர்கள் இவர்கள் மட்டுமன்றி மணமகனுக்கு முன்பே புரோகிதரும் தன் பங்குக்கு ஒரு தாலி கட்டிக் கொள்வார்.

கடைசியில் தான் மணமகன்.

பிறகு தாலிக்குப் பதில் காப்பு என்ற பெயரிலே கட்டினார்கள், தற்போது பரவாயில்லை மணமகனை விட்டு கட்டச்சொல்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் எத்தனை என்று உங்களால் சொல்ல முடியுமா?

//இதில் வரும் தெய்வங்களும் அவர்களுடன் பெண்ணுக்குச் சொல்லப்படும் உறவும் உருவகம் தான். அது உடல் உறவு அல்ல. அதனை இந்தக் காலத்தில் நாம் 'அடைந்தேன்' என்னும் சொல்லுக்கு கூறும் 'தாம்பத்ய உறவு' என்று பொருள் கொண்டு விதண்டாவாதம் புரிவது பொருத்தமற்றது. ////

நிச்சயம் இவர்களில் யாரும் பெண்ணுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளவில்லை.

முத்துக்குமரன் உங்களுக்குக் கூட மாற்றான் மனைவியை உங்களுக்குப் பிடித்தமாதிரி உருவகப்படுத்திக்கொண்டு அதை அவள் கனவனிடமும் சொல்லிக் கொள்ள முழு உரிமை உண்டு.

(பாருங்கள் இதில் எந்த இடத்திலும் பெண்கள் சம்பந்தப்படவில்லை.)

//For your age, you might not have seen enough to talk about these mantra. Focus your energies in getting your professional skills up. You are in the prime time in your career//

மற்றபடி, இந்த வயது முக்கியமான காரியங்களைச் செய்யும் வயது. ஆகவே நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது ஒரு வங்கியில் போட்டு சேமிக்கவும்.

(பி.கு: இந்த பதிவு ஒரு அவசரப் பதிவு, தற்போதைக்கு ஆதாரம் கொடுக்க என்னிடம் எந்த உரலும் இல்லை. ஆகவே வீடு(வூடு? நன்றி:முத்து) கட்டிக்கொள்ள விரும்புவர்கள் கட்டிக்கொள்ளலாம். ஆதாரத்துடன் நான் மீண்டும் சந்திக்கிறேன்.)


தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு சாக்கடை கும்பலில்? இருந்து,
பூங்குழலி

இசைத்தமிழ்?

இசையின் சுரங்களை கொண்ட நிறைய சொற்கள் தமிழில் உள்ளன என்றே நினைக்கிறேன்.

இது ஒரு ஆர்வக்கோளாறான பதிப்பாகவும் இருக்கலாம்.



கரிமாரி காப்பா(ள்), பரிதாப பாப்பா
சரிசரி மாமா பதநீ(ர்) சரிக;
தபசணி தாத்தா, சரிசம மாக
கபமறி கா!பத நீ!தா!



"பரிகாச மாமா" என்று போடவும் ஆசை. :-))

நன்றி,
பூங்குழலி

திருக்குறள் சைவமா? - சன் டிவி வணக்கம் தமிழகம்.

ஒரு வேண்டுகோள்.

// நான் விரும்புவது, சைவம் சார்ந்த கருத்துக்களை, திருக்குறளில் இருந்து எடுத்தாண்டு சொல்லும் ஒரு இனிய பதிவையே. //

****இது கண்டிப்பாக முடியக் கூடியதே. நமது தமிழ்மணத்தில் இது தொடர்பான வேண்டுகோளை வையுங்களேன்.

ஏனென்றால் இந்தப் பதிவு வேண்டுகோள் வடிவிலோ, ஆவல் வடிவிலோ இல்லை என்பது என் கருத்து.****


அன்பர் சொல்லியவிதமே இதை வேண்டுகோளாக மாற்றிக்கொண்டேன்.

ஒருபக்கப் பார்வையாக மட்டுமே இல்லாது, விவாதத்தை ஏற்றுக்கொண்டு அதை விளக்கவும் செய்யும் பதிவை வேண்டுகிறேன்.

நன்றி.


இன்றைய வணக்கம் தமிழகம்(02-JAN-2006) நிகழ்ச்சியில்
திரு கு.வைத்யநாதன் ( திருவாடுதுறை சைவசித்தாந்த
நேர்முகப் பயிற்சி மையம்) அவர்கள்
திருக்குறளில் சொல்லியுள்ளது சைவ சித்தாந்தமே என்று
சொல்லி அதற்கு சில குறள்களையும் (குறிப்பாக எண்குணங்களைப்பற்றி)
எடுத்துக்கூறினார்.

அந்நிகழ்ச்சி விவாதத்திற்கு இடம்தராத, ஒருவரே தனது
அனுபவத்தை/தகவல்களை மற்றவருக்கு சொல்லும்படியான
நிகழ்ச்சியாகும்.

ஏற்கனவே, புத்தர் விஷ்னுவின் அவதாரமா? என்ற
எனது குழப்பத்தைத் தெளிய முயலும் வேளையில்
இன்று மேலும் ஒரு குழப்பத்தை சேர்த்துவிட்டார்.

விவாதம் மேற்கொள்ளாது, ஒரு கருத்தினை
ஏற்றுக்கொள்ளுவது சரியான செயல் அல்ல.

ஆகவே தமிழ்மண அன்பர்கள் யாரேனும் குறள்/சைவம்,
சைவர்கள் எப்போது சைவரானார்கள் போன்ற
கருத்தை விவாதப் பொருளாக கருதி, மற்ற தமிழன்பர்கள்
தெளிவுபெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புத்தர்/அவதாரம் பற்றிய செய்திகளுடன், உண்மைக்கருத்துக்களை சொல்லிட விரைவில் வருகிறேன்.

நன்றி.
பூங்குழலி.