அற்புத ஆண்டே வருக!

இயற்கை யதுதரும் சீற்ற மறுக
இலங்கையில் யுத்தம் அறவே யறுக
பலனைக் கருதா வடியார் பெருக
இலனை யவர்தொகை நாட்டில் குறைக
ஒழுக்க முடையவர் ஒண்பொருள் வெல்க
இழுக்க லுமில்லா நடுவணும் நீள்க
மடிவெல் குடிகள்தம் வாக்கைத் தருக
குடிநலங் காக்குந்தமி ழரசே யமைக
கற்பதும் நன்றாய் எனக்கு முடியவே
அற்புத வாண்டே? வருக..


அனைவருக்கும் புத்தாண்டு நல் எதிர்பார்ப்புகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
பூங்குழலி.


(பி.கு அன்பர்களை, தளைதட்டா வேறு சிறந்தச் சீர்களையும் சேர்த்து புத்தாண்டை வரவேற்க வேண்டுகிறேன்.)

பாமரன் என்போன் யார்?

இசை பாமரனையும் சென்றடைய வேண்டுமா? என்று இசை தெரியாதவர்களைப்பற்றி ஏளனமாய் எழுதியுள்ளார்.
(இதில் நானும் அடக்கம்)

அவர் பாமரன் என்ற பதத்தை என்ன அர்த்தத்திலே எழுதியுள்ளார் என எனக்கு முழுமையாக விளங்கவில்லை.

பாமரன் என்றால் குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி அறியாதவன் என்ற பொருளிலே எடுத்துக்கொண்டோமானால்,

தமிழைப்பொறுத்தவரையில் திரு. மன்மோகன் சிங் பாமரர். பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு பாமரள்.இதில் பாமரத்தன்மை என்பதை சமூகம் அல்லது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை வைத்தே நாம் முடிவுகட்டிவிட முடியாதல்லவா?

நான் புரிந்துகொண்டவரையில் அவர் 3,4ம் சமுகங்களையும், 54க்குப் பிறகு இந்துமதத்தில் நைசாக? சேர்த்துக்கொண்ட பூர்வகுடிகளையும் மனதில் வைத்தே இவ்வாறு சொல்லியுள்ளார்.

இசை ஏதோ அவரின் குடும்பச்சொத்து மாதிரியும், அவரின் நிலையில் இருந்து இறங்கி வந்து சொல்வது "உவ்வே" உணர்ச்சியைக் கொடுப்பது மாதிரியும் எழுதியுள்ளார்.

கல்வி/ கலை போன்றவைகளைப் பொருத்தவரையில் நாம் தொழிலை எடுத்துக்கொள்ளமுடியுமே தவிர கலையை அல்ல.

ஐயன்மீர்களுக்கு!

நாம் வந்தேறிகளா இல்லையா என்பதை, இங்கே நாம் விவாதம் செய்யவேண்டாம். நாம் ஒரு இடத்தில், நிரந்தரமாகத் தங்கியாகிவிட்டது.

பிறப்பாலேயே குடியுரிமை/வாக்குரிமை கிடைத்தாகிவிட்டது. பிறகும் நான் குறுகிய வட்டத்திற்குள் தான் வாழ்வேன், ஊருடன் ஒத்துவாழமாட்டேன் என்று சொன்னால் எப்படி?

இன்னும் கேட்டால் கர்நாடக சங்கீதம் நம்மிடம் எத்தனை ஆண்டுகளாய் உள்ளது?

ஒரு 300 ஆண்டுகள்? அதற்கு முன்பு?

இப்படி உயரிய கலைகளை நமக்குள்ளேயே வைத்துப் பாதுகாத்தோமானால், இவைகளுக்கும் நம் சமஸ்கிருத மொழிக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இத்தகைய செயல்களால் எத்தனை இளையராஜாவை நாம் இழந்தோமோ?

தனி அடையாளங்களை/பண்புகளை வைத்துக்கொண்டு ஒரு மூடிய குழுவிலே இருந்தால், அந்த அடையாளங்கள் இல்லாத மற்றவர்கள் காரணமில்லாமலேயே விரோதியாய் பார்ப்பது, குழு உளவியல் மனப்பாண்மையாகும்.

ஆகவே சற்றே சிந்தித்து, தகுந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஐயன்மீர் அல்லாத பாமரர்களுக்கு...

இரை தேடவே அல்லல் பட்டு போராடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு
இறை சார்ந்த கலைகளைப் புரிந்துகொள்ளவும் வேண்டுமோ?

கமலகாசன் படத்தில் சொன்னதைப்போல் பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவன் காதில் இசை எப்படி நுழையும்.

3 வேலை உணவைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் மட்டுமே கலைமகள் இருப்பாள்.

சரி, தற்போது உள்ள வாய்ப்புகளால் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து உள்ளவர்கள், எத்தகைய முயற்சியும் செய்யாமல்,

அது எனக்குப் புரியவேண்டும் என்று சொன்னால் எப்படி?


அதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்யவேண்டுமல்லவா?
நீங்கள் கேட்டு, உங்களுக்கு கற்றுக்கொடுக்க மாட்டேன் என்று யாராவது சொன்னார்களா?

ஆனாலும் உங்களின் பூர்வீகம், வரலாறு போன்றவற்றைப் பார்க்கும் போது நகைப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை.

ஒரு கலையில் விவரங்கள், ஒரு சாரரிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியின் வார்த்தைகள் அக்கலையில் அதிகமாகப் புழங்கினால் அது அவருக்கே சொந்தமாகி விடுமோ?

இசை சமஸ்கிருதத்தின் உரிமையென்றால் பின் ஏன் தூய்மையான பிரதேசங்களான பிரம்மவர்த்தம், பிரம்மவர்ஷி, மத்தியதேசம் மற்றும் ஆர்யவர்த்தம் ஆகிய இடங்களில் பரவாமல் மிலேச்சர்கள் வாழும் இந்தப் பகுதியுடன் அடங்கிவிட்டது?


இப்படிப் பரவாத மற்ற கலைகளையும் இவ்வாறே கொள்க..

ஒருவேளை அமெரிக்கர்களுக்கு இட்லி, தோசை ஆகியவை பிடித்துப்போய், அவர்கள் செய்முறையை அவர்களின் மொழியிலேயே எழுதிக்கொண்ட பிறகு,

அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமைக்கு அதிக மானியமும், அரிசிக்கு மிகக் குறைந்த மானியமும் அளித்து,

நம்மை இரண்டாந்தர குடிமக்களாய் நடத்துவதின் காரணமாக,

நாமும் கோதுமை உணவு வகைகளுக்கு மாறிவிட்ட பிறகு,

மேலை நாட்டினரைப் பார்த்து, ஆகா! அவர்களின் உணவுச் சுவையே சுவை என்று கைதட்டி மகிழ்ந்தாலும் மகிழ்வோம்.


பாட்டு, கூத்து, விகடம் செய்தலைத் தவிர்க்கவேண்டும் என்ற அறிவுரைகளையும் மீறி,

தமிழரின் கலைகளை,
பாண்டிய மன்னன், தில்லி மாலிக்காபூரிடம் தலையை அடகு வைத்த அன்று முதல், இன்னும் அடிமையாய் இருக்கும்

இன்று வரை,
பத்திரமாய் காப்பாற்றி வருகின்றனர்.

ஆகவே தயவு செய்து, கர்நாடக இசைக்கலைஞர்களை வர்ண துவேஷம் பாராமல், ஆதரியுங்கள்.தாராளமாக குரு தட்சினை கொடுத்து கலைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

வீணே மற்றவரை குறை சொல்வதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

நன்றி,
பூங்குழலி.

மனதிற் பட்டவை.

பிரசவத்தையும் , காந்தி பார்க்கும், கலாச்சார 'காவலர்களும்' என்ற பதிவுகளைப்
பார்த்து மனதில் எழுந்த எண்ணங்கள்.

மற்ற விலங்கினங்களைவிட மனிதனுக்கே பிறக்கும்போது
தலை/உடல் அளவு விகிதாச்சாரம் அதிகம்.

அறிவு வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை இது.
அதனாலேயே மற்ற விலங்குகள் போலல்லாமல்,
மற்றவர் உதவியின்றி மனிதரால் பிரசவிக்க முடியவில்லை.


கரு தாங்கி, உடல்வருந்தி, பிரசவத்தின்போது
பெண்கள் மறுபிறவியெடுத்தாலும்,
கலாச்சார காவலர்கள்/சமூகம் நம்மை
இழிவுப்படுத்தி இன்பங்காணும்.

அறிவின் வளர்ச்சித் தலையி னளவுச்
செறிவின் பயனா லிடைஞ்சல் - பசிதோய்
மெய்ப்பை பிதுக்கின் குழவியு மன்றித்
தாய்க்கும் மறுபிறவி யன்றோ!


நிதமு மறுவிறவி யெடுத்தாலும் நன்
மதலைப் பேறுகளை ஈந்தாலும் - வண்காம
வலையும் வீசுமோகினி யென்றே இழிவாய்
உலகமும் சொல்லிப் போகும்.



குற்றம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?

பெண்களுக்கேன் செலவுச் செய்யவேண்டும்? என்று எண்ணாமல் கல்விக்கண் கொடுத்து, பெண்களையும் இந்நாட்டின் குடிமக்களாக ஆக்கும் தெய்வங்களுக்கு நன்றி.

பல்கலை வித்தகர், சொக்கத்தங்கம் அவர்களுக்கு,

நிறைய பேர் பலதரப்பட்ட தலைவர்களுக்கு திறந்த கடிதம் எழுதுகிறார்கள், நாம் ஏன் அதுபோல் ஒன்று எழுதக்கூடாது என்ற எண்ணத்தினால் இக்கடிதம். நிற்க...

முதற்கண், உங்களுடைய குலம், கோத்திரம் நிச்சயமாகத் தெரியாததால், உங்களை குசலம் விசாரிக்க மனமில்லை,

ஆகவே ஆரோக்யம் மட்டும் விசாரித்துக்கொள்கிறேன். "உடல் நலமாயுளதா?"

பெண்ணுரிமையை/பெண்ணியத்தை உயர்த்துவதையே தனது உயிர்மூச்சாகக் கொண்டுள்ள, பெண்களை இழிவுபடுத்தும் படங்களை இதுவரை வெளியிடாத,

(கண்டிப்பாக இதற்கு பெண்கள் அனைவரின் சார்பாக? நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்), அன்றாட மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவைகளான மகாபாரதம், இராமாயனம் போன்றவற்றில் பாண்டித்யம் பெற்ற,

வெறுக்கத் தக்கதா (Neo?) பிராமணீயம் (பாருங்கள், வர்ணப்பெயரை பொது இடத்தில் பயன்படுத்துகிறேன், கண்டிப்போர் கண்டிக்கலாம்) என்ற சம/தொலை நோக்குப் பார்வையுள்ள நூலை இயற்றிய(இன்னும் படிக்கவில்லை, ஓசியில் கிடைக்குமா?),

யாராயிருந்தாலும் தவறென்றால் கிண்டலடிக்கின்ற, தவறினைச்சுட்டிக்காட்டுகின்ற, கிண்டலடிப்பதில் மகிழ்ச்சியடையாத,

தமிழகப் பத்திரிக்கையுலகிலும், இன்னபிற கலைத்துறைகளிலும் அலாதியான/அசைக்கமுடியாத இடத்தைப்பெற்றிருக்கும்,

உங்களை,
உங்களின் புகழை ஒருசில பதிவுகள் மட்டுமே போட்டு குறைத்துவிடலாம் என மனப்பால் குடித்து, அவ்வாறே பதிவுகளையும் போட்டுள்ளனர் சில அறிவில்லாதவர்கள்.

அதுசரி, கழுதைகளே Male(?) என நினைத்து கழுதைகளின் படத்தைப்போட்டீர்களோ? என்னவோ?
(நகைசுவைக்காக மட்டுமே, ஆண்கள் மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம்)
இது என்னத் தனமான உத்தி/சிந்தனை எனச் சொல்லவும்.

உங்களின் இந்த ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பங்களிப்பு ஒன்றா, இரண்டா?
அப்படிப்பட்ட உங்களை, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர் என்று வேறு சொல்கிறார்கள்.

மேலும், எதிர்ப்புக்கடிதமானாலும் குறிப்பிட்டவர்களிடமிருந்து வந்தால் அதை பிரசுரிப்பீர்கள் மற்றவர்களிடம் இருந்து வரும் ஆதரவுக்கடிதமானாலும் அவை போகுமிடம் குப்பைத்தொட்டி எனவும் கேள்விப்பட்டேன்.

(ஆதாரமில்லாத கருத்து இது, தவறென்றால் மன்னித்து ignore செய்யவும்)

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர் என்ற அவப்பெயரை போக்கும் வகையிலே, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பலதிரப்பட்ட நற்செயல்களை செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

உங்களின் இதுபோன்ற சீரிய பணிகள் மேலும் சிறக்க எல்லாம் வல்ல தேவர்கள் உங்களை ஆசிர்வதிப்பாராக...

எனது வயதைவிட பத்திரிக்கைதுறையில் அதிக அனுபவம் உடைய உங்களின் அருமை பெருமை எனக்கே இவ்வளவு தெரியும்போது,

உங்களின் சமவயதினர்கள், ஆரம்பத்திலிருந்தே உங்களின் சமுதாயப் பங்களிப்பை, கண்ணால் கண்ட சாட்சியாய் இருப்பவர்கள் உங்களின் ஆதரவுப் பதிவுகள் போட்டது தவறில்லையென்றே நினைகிறேன்.

ஆனால் சிலர் இத்தகைய பதிவுகளைத் தவறாய் திரிக்கின்றனர்.


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைத்துவிட முடியாது.போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
உங்களின் சமுதாயத்திற்கான பங்களிப்பை இந்த எல்லைகளுடன் நிறுத்திக் கொண்டுவிடாதீர்கள்.

தற்போதைக்கு இங்கே காட்டாட்சி நடைபெறுகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

ஒரு குல ஒழுக்கமற்ற பிராமணன் கூட மன்னனுக்குரிய இடத்தில் இருந்து நீதி உரைக்கலாம்.ஆனால் நான்காம் வருணத்துச் சூத்திரன் மட்டும் நீதி வழங்கக் கூடாது.

இதை மீறி சூத்திரன் நீதி செய்தால் , அந்நாடு சேற்றிலகப்பட்ட பசுவைப்போல் நம் கண்முன்னே துயறுற்றழியும்.

சூத்திரரும், நாத்திகரும் மிகுந்து, பிராமணர் நலியும் நாடு, வறுமை நோயால் அழிந்துபோகும்.

இடஒதுக்கீடு என்ற பெயரிலே 7 ஆண்டுகள் படித்துவிட்டு இப்பதவிக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள்.

நேற்றுகூட தன் சொந்த முதலை? போட்டு கல்லூரி நடத்தும், தனியார் கல்லூரிகளிலும் இடஓதுக்கீடு வாங்கிவிட்டார்கள். இப்படி அவர்கள் நீதியுரைப்பதால் நம் முன்னோர்கள் வகுத்த அத்தனையும் பாழாகிவிடுகின்றன.

பிரம்மா முதலில் பிராமணர்களைப் படைத்ததினால் இவ்வுலகில் அனைத்தும் நமக்கே சொந்தம்(அடுத்தவன் உயிரையும் சேர்த்து).

அதுமட்டுமா, இரு பிராமணர்களுக்கிடையே வழக்கு வந்தால் அதை அரசனால் கூட தீர்க்கமுடியாது.

இரு தரப்பினரையும் வருவித்து, அவர்களையே ஒரு முடிவுக்கு வரவிடவேண்டும்.

செய்தார்களா இந்தக் கயவர்கள்?மாநிலத்திற்கு மாநிலம் அல்லவா இழுத்தடிக்கிறார்கள்?

ஆகவே இடஒதுக்கீட்டை மறுக்கும் வகையிலே நீதித்துறையையும் நாம் தனியாராக்க வேண்டும்.

நாம் அரசாட்சி செய்தாலொழிய நாம் இதை அடையமுடியாது. மற்ற கட்சிகளின்மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

நீங்கள் பிரதமராக எந்தக்கட்சி அறிவிக்கின்றதோ, அக்கட்சிக்கு, அவர்கள் கழுதைகளை மட்டுமே நிறுத்தினால் கூட (பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை),

அவைகளுக்கே இந்திய துனைக்கண்டத்திலுள்ள அனைத்துப் பெண்களும் ஓட்டுப்போடுவோம் என அனைத்துப் பெண்களின் சார்பாக நான் உறுதிகூறுகின்றேன்.

இப்படிக்கு,
உங்களை பிரதமராக்கி அழகுபார்த்திடத் துடிக்கும்,
பூங்குழலி.

திருவாளர் போலிடோண்டு அவர்களுக்கு..(மீட்புப்பதிவு)

மன்னிக்கவும், இவ்வுரலில் பார்க்கக்கிடைக்கும் இப்பதிவை எனது பதிவுப்பட்டியலில் காணப்படவில்லை. பின்னூட்டமும் இட இயலவில்லை.ஆகவே இந்த மீட்புப்பதிவு.தலைப்பு பெரிதாகியதால் இந்த பிரச்சினைகள் என நினைத்து தலைப்பை மட்டும் சுருக்கியுள்ளேன்.
நன்றி.



சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட நீங்கள் யார்?
சமுதாயத்தின் சாணக்கியத்தனத்தால்
விதை நெல் தொலைத்த
விவசாயியா?

குட்டுப்பட்டே குனிந்த தலையுடைய
சமூகத்தின் முகம்
இழந்த மனிதரா?

தம் சகோதரர்களுக்கு ஈழத்தில் நடக்கும்
கொடுமைக்கு, வெளிப்படையாய்
குரல் கொடுக்க உரிமையிழந்த
தமிழருள் ஒருவரா?

தனது நியாயமான கோரிக்கைகூட
ஏற்கப்படாத குழந்தை
தன் வீட்டுப் பொருள்களையே
உடைத்து அடம்பிடித்ததால்
அதிகாரம் செல்லுபடியாகும் பெற்றோர்களால்
தீவிரவாதி என அடையாளம்
காட்டப்பட்டவரா?

தோல் பட்டையை தட்டிக்கொடுத்து
வேலை கொடுக்கும்
நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டவரா?

திருவாளர் டோண்டு அவர்களின்
நாவண்மையின்கண் தீக்காயம் பட்டவரா?

அல்லது எதிராளிகளின் மதிப்பை
அடுத்துக் கெடுக்க வந்த
அமிர்தம் சாப்பிடுபவரா?

எப்படியாகிலும் தங்களின் நோக்கம்தான் என்ன?

தங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த தமிழ் வலைப்பூவர்களின் கண்ணியம் அல்லவா காற்றில் பறக்கிறது?

தங்களின் கருத்து கூற ஏனிந்த குறுக்கு வழி?
திருவாளர் டோண்டு போன்றவர்களைப் பொறுத்தவரையில், அவர்களின் சூழல் அப்படி.
சிறுவயதிலேயே மூளைச்சலவை செய்து குழந்தைகளை வளர்ப்பது, அச்சமூகத்தின் கைவந்த கலை.
அதற்காக அவர்களின்மேல் பரிதாபப்படவேண்டுமே தவிர, "வலைப்பூ கண்கானிப்பாளர்" அளவுக்கு அவரை உள்ளாக்கக்கூடாது.

அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது மனமாற்றமே தவிர, அமிர்தம் சாப்பிடும் அனைவரையும் காலி செய்வது அல்ல.

அவர்களும் நமது சமுதாயத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.(இது பற்றி தனியாக பதிவுபோடலாம் என்றிருக்கிறேன்).

அவராவது பரவாயில்லை, விவாதத்திற்கு தயாராய் இருக்கின்றார். ஆனால் இன்றும் பசுமாட்டு சாணிக்குழியை தொட்டுக்கும்பிட்டு சக மனிதனை தொட மறுக்கும்/அடிமையாய் பார்க்கும் ஆண், பெண் இருக்கவே செய்கிறார்கள்.(அல்லது அத்தகைய சூழலை அறவே விலக்கி விடுகிறார்கள், இதில் மற்றவர்களும் விதிவிலக்கல்ல)

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கலை சிலருக்கு கைவந்திருக்கின்றது.உங்களுக்கு அது கைவரவில்லை என்பதற்காக திருவாளர் டோண்டுவின் மேல் ஏனிந்த கஷ்மிலம்.(கஷ்மிலம்=கசுமாலம்=பொறாமை).

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற உங்கள் நடவடிக்கை யை என்னால் சகிக்க முடியவில்லை.
பொத்தாம் பொதுவாக சிலர் உங்களை இழிபிறவி என்று விளிக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரையில், பிறவி எனும்போது உங்கள் பெற்றோரை குறிப்பாக உங்கள் தாயாரின் ஒழுக்கத்தை தாக்குகின்றர்கள்.

(தனிமனிதனின் செயலுக்கு, ஒன்றுமறியா பெண்மையை இழிவுபடுத்தும், பெருந்தகையாளர்களுக்கு என் கண்டணங்கள் உரித்தாகுக...)

இத்தகைய உங்கள் செயல்களால் சில எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

1.நீங்கள் கூறும் நல்ல கருத்துகள்கூட, முற்றிலும் உதாசினப்படுத்தக் கூடிய அபாயம் இருக்கின்றது.

2.திருவாளர் டோண்டு அவர்களின் மேல் அனைவருக்கும் ஒரு கரிசனம் உண்டாகி, அவர் கூறக்கூடிய (வாய்ப்பு மட்டுமே) விவாதத்திற்கு உரிய கருத்திற்கு சரியான அளவில், கண்டணமோ அல்லது எதிர் குரல்களோ எழாமல் போகக்கூடும்.

3.பிறகு பெரும்பாலான பதிவுகள் அடியார்களின் பின்னூட்டங்கள் மட்டுமே இருக்கும் அபாயம் உள்ளது.
இது ஆரோக்கியமான சூழல் இல்லை.

டோண்டு அவர்களாவது இணையத்தை வெகுநேரம் பயன்படுத்தும் வசதியை பெற்றிருக்கிறார்.
அவரால் உடனே மறுப்புப் பின்னூட்டம் இட முடிகிறது. மின்னஞ்சல் மூலமாகவும், காசு கொடுத்து இணைய உலா நடுவங்கள் மூலமாகவும், பூவேற்றும் என் போன்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால்?

சக வலைப்பூ உறுப்பினராய் கேட்கிறேன். புது வலைப்பூ தொடங்குங்கள். ஆதிக்க சமுதாயத்தின் பிடியில் இருக்கின்றீரா? முகமூடி போட்டுக்கொள்ளுங்கள்.விவாதியுங்கள்.
ஆளையே வலைபதிவில் இருந்து ஓடச்செய்யும் செய்கையை கைவிடுங்கள். தேவை சிறு மனமாற்றம் மட்டுமே...

பெருகும் அன்புடன்.
பூங்குழலி.

மக்கட் தொண்டுசெய் சண்டிகேசுவர் (காதுகேளாச் சாமி?)

முந்தைய பதிவின் பல்வேறு பின்னூட்டங்களுக்குப் பிறகு எனது புரிதல்.
சரியா எனச் சொல்லவும்.

சக மனிதன் பசியால் வாடிக்கொண்டிருக்கும்போது, கடவுளுக்குப்போய் பால், நெய், தயிர், பஞ்சமிர்தம், இளநீர், இன்னும் எத்தனையோ அபிஷேகம் தேவையா? என ஆதங்கப்பட்டதுண்டு.

முற்காலத்தில் தமிழகத்தைப்பொறுத்தவரையில் கோயில் (கோ=அரசன், இல்= இருப்பிடம்) இறைவன் (இறை=வரி,வரிவிதிப்பவன்) என்ற அளவிலே சமுதாயக் கூடமாகவும் தானியங்களிச் சேர்த்துவைக்கும் இடமாகவும் இருந்துவந்துள்ளது. (பிற்காலத்தில் தலைகீழாகிவிட்டது).

உள்ளோர் பலர் மனமுவந்து அன்னதானம் செய்துள்ளனர். அரசர்கள் ஊட்டுப்பாறை போன்ற காரியங்களையும் செய்துள்ளார்கள்.ஆனால் இவை எல்லா தரப்பினருக்கும் கிடைத்ததென்றால் அதுதான் இல்லை.

சரி நாம் விவாதப்பொருளுக்கு வருவோம்.
சாப்பாடு கொடு என்றால் கொடுத்துவிடுவார்கள். ஆனால் "Creamy layer" எனப்படுகிற சமுதாயத்தின் அப்போதைய மேல்குடி மக்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய, பஞ்சமிர்தம்(மூலப்பொருள்கள் யாவை?)போன்ற பொருளை தானம் செய் என்றால் செய்வார்களா?
ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக் கேட்டால் உலோபி கூட கொடுத்துவிடுவான்.

அப்படித்தான் பொருட்கள் இறைவனுக்குச் சாத்தப்பட்டு, மக்களுக்கு போய் சேர வழிவகுத்ததாகவே நினைக்கிறேன்.

சரி, திருச்சாத்து(தர்ம அடி அல்ல) முடிந்தவுடன் அனைத்தும் வீணாகிவிடுமே. அதனால்தான் சாத்து மிகுபொருட்களை கோயில் பூசாரியின் உதவியாளர் வைத்திருப்பார். வேண்டுவோர்(?), தான் வந்திருப்பதை அறிவிக்கவே அந்த கைசொடுக்கும் பழக்கம்.(காதுகேளாச் சாமி சிவனடியார் சண்டிகேசுவர் அல்ல, உள்ளே? இருக்கும் நம் உதவியாளர்தான்).

சரி, சண்டிகேசுவர் இங்கெப்படி வந்தார்?
அப்படி வேண்டுவோர், கைசொடக்குப் போட்டு, சாப்பிடும்போது யாராவது பார்த்துவிட்டால்?
நமக்குத்தான் மானம் முக்கியமாயிற்றே? நம் மானத்தைக் காக்கவே சண்டிகேசுவர் இருக்கிறார்.


இதைதான் பூங்குழலியார் சொல்கிறார்....(சற்று தலைக்கணமோ?)

ஈயென விரத்த லிழிவெனத் தேர்ந்துச்
சேயென நின்றநம் மக்களுக் கபயம்
சண்டி கேசுவரின் மென்கரமே! மக்கட்
தொண்டு மகேசன் தொண்டே யாமென்.


(நிலைமண்டில் ஆசிரியப்பா, தளை தட்டிற்றா? ஆமென்றால் என் தலையை தட்டவும்.)

சண்டிகேசுவரின் பெயரையும், மற்ற விளக்கங்களையும் கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

எனக்கு எந்த ஆகம விதிகளைப்பற்றியும் தெரியாது.
எனது இந்தப் புரிதல் சரியா?

நன்றி.
பூங்குழலி

காதுகேளாச் சாமி?

தமிழ்நாட்டுக் கோயில்கள் பெரும்பாலனவற்றில் மூலவரின் இடப்பக்கத்தில் காது கேட்காத சாமிக்கென்று ஓர் இடம் இருக்கும்.

(அடுத்த மாநிலக்கோயில்கள் பற்றி எனக்கு தெரியவில்லை, இச்செய்தியைப் பொறுத்தவரையில் நான் ஒரு கிணற்றுத்தவளை).

கோயில் பிரகாரத்தைச் சுற்றிவரும்போது அங்குமட்டும் கையினால் சொடக்குப்போட்டு பிறகு வேண்டிக்கொள்வோம்.

(மனதிற்குள் வேண்டும்போது மட்டும் சாமிக்கு கேட்குமா என்று தெரியவில்லை)

இதற்கு ஆகம விதிப்படி ஏதேனும் காரணம் உள்ளதா?
அல்லது பொதுப்படையான காரணம் ஏதேனும் உள்ளதா?

தயவு செய்து தெரிந்தவர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

நன்றி,
பூங்குழலி.

ஆண்-பெண் கற்பு நிலை, பகுதி--1


புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின் வேறல்ல - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும்
- நாலடியார்.


மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன் கற்பு என்பதை மனித உறுப்புகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது மனது/ஒழுக்கம் சார்ந்தது.
கற்பு என்பதற்கு இப்பதிவின் கடைசியில் உள்ள வரையறையைக் காண்க....
ஒரு பெரியவர்(மகா பெரியவாள் அல்ல), ஆண்-பெண் கற்பு நிலையைப்பற்றி முற்போக்காக சிந்திப்பதாக நினைத்து எழுதி, செப்படி வித்தை செய்து மற்றவரை நம்பவைப்பதைப்போல, அதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்.

படிதாண்டாதவள் நிலை.
//சீக்கு வந்தவனுக்கு பத்தியம் சொல்லிகுடுத்தா 'நல்லா இருக்குற உன்புள்ளைக்கு ஏன் இந்த பத்தியம் சொல்லி குடுக்கலை"னு சீக்காளி சண்டைக்கு வர்ர மாதிரியல்ல இருக்கு.
நீங்க சொன்னதெல்லாம் எதுக்கும் துணிஞ்சு வெளில போரவங்களுக்கு தான்,வீட்டுலயே இருக்குற குடும்ப குத்துவிளக்குகளுக்கு கிடையாதுனு புரியர புத்தி அந்த மண்ணாந்தைகளுக்கு கிடையாது.
//

நமது கிழவன் ஒரு நாள் வீட்டிற்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு செல்கிறார்.கிழவனுக்கும் உடல் இச்சை என்பது பசி, தாகம் மாதிரிதானே..

புணர்வின் உச்சம்.இருவருமே மனம் ஒத்து இன்பம் துய்க்கின்றனர்.திடீரென்று நம் கிழத்திக்கு, கிழவனாரின் முகம் பிடிக்காமல், தமிழர்களின் ஏகோபித்த அன்பைப்பெற்ற தலைவர் ரஜினியை நினைத்துக்கொண்டு கண் மூடி இன்பம் துய்க்க ஆரம்பிக்கின்றார்.

என்ன நெஞ்சு பதறுகின்றதா?.....

அடுத்தமுறை உங்கள் கண்மூடிய மனைவியுடன் புணரும்போது, தயவு செய்து மேற்சொன்ன கருத்துகளை நினைத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கை கசந்துவிடும்.

இப்போது கற்பு என்றால் என்ன என்று புரிந்துஎருக்கும் என நம்புகிறேன். ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள். கற்பை அடுத்தவர் மீது திணிக்காதீர்கள்.

ஆடுகளின்மேல் ஓநாய்களின் கரிசனம்.
//"திருமணத்துக்கு முன்னும் அவன் மண்டையை போட்டதுக்கப்பாலும்
ஏன் இவளுக்கு கட்டுபாடுகள்னு கொஞ்சம் விளாக்க முடியுமா?"
அதுதான் இருந்ததிலேயே ஒரு பெரிய கொடுமை. அவன் மண்டையைப் போட்டால் என்ன? அவனுக்கு அப்புறம் அவளுக்கு வாழ்வேயில்லை என்று காண்பித்தால்தானே மற்ற ஆண்கள் சும்மா இருப்பார்கள்?
கொடுமை, கொடுமை.
//
ஆணாதிக்க ஓநாய்களுக்கு பெண்களின் மேல் எத்துனை கரிசனம்...

கொல்லைப்புற வழி.

////விபசார தடைச் சட்டட்தை வாபஸ் பெற்றால் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும்// என்பது மிகவும் உண்மை. consumer என்ற group இருக்கும் வரை, இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதைதான். அதை ஒரு தொழிலாக அறிவித்து `விபசாரி' என்ற பதத்துக்கு மாறான `பாலியல் தொழிலாளர்கள்' என்ற பதத்தை நடைமுறைப் படுத்தலாம்.//

//பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும்.//

இதுமாதிரி கருத்துகளை சொல்லியிருக்கிற அல்லது மற்றவர்களின் பின்னூட்டத்த மறுக்காத அவர், மேம்போக்காக பெண்களுக்கு நல்லது நினைப்பவராகவே தன்னை காட்டிக் கொள்பவர், கொல்லைப்புற வழியாக

தேவதாசி முறை
குழவித் திருமணம்.(பால்ய விவாகா)

போன்றவற்றை பார்வையாளர்களின் ஆழ்மனதில் புகுத்த முயற்சிக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.


உடல் பசி
//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.//
இதில் நிச்சயமாக யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொறிந்துகொள்ளலாமா?
என்ன நினைக்கின்றார் அவர்?


புராணத்தின் பங்கு.

ஓ, இந்தியத் திருநாட்டில் பிறந்த ஆண் மாக்களே!
மானம் வ்ற்றலுக்கென்றே, பிறப்பால் ஒரு சாதி நமது நாட்டில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.
வேளாளன் பிள்ளை வேளாளன் என்பதுபோல், வேசியின் பெண்னும் வேசியாகக் கருதப்படுகிறாள்.

புராணங்களில், குறிப்பிட்டவர்கள் தெய்வ மூலம் உடையவர்களென்றும், அவ்வினத்தார் ஒவ்வொரு குடுபத்திலிருந்தும் ஒவ்வொரு பெண் தெய்வப்பணிக்கென்று அர்ப்பணிக்கப்படல் வேன்டும்.பிறகு அவர்களுக்கு பொட்டு கட்டிவிட்டார்கள்.தற்போது அவ்வாறு முடியாது ஆகவே பெண்கள் தாங்களே முன்வந்து பொட்டு கட்டிக்கொள்ளாத தாசிகளாய் இருக்கவேன்டும் என விரும்புகின்றனர்.

சட்டமியற்றியும் அவர்கள் பெண்களுக்கு உதவ காத்திருக்கின்றனர்.

இழிவு யாருடையது?

ஆண் மக்களிடையே ஒழுக்கம் காக்கப்படின் பெண் உலகில் இழிவேது...


நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே
- அவ்வையார்

நிச்சயமாய் பூனூல் போட்ட அவர்களை ஆணென்று கருதி கேட்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கற்பனை விபச்சாரகன் கிருஷ்ணனின் கோபியர்கள் அன்றோ...

கைம்மை நிலை.

1921 ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கைம்மை நிலை புள்ளி விவரங்களிது.










1921இருபாலர்பெண்கள்கைம்மை அடைந்தோர்
1 - 15 வ
அனைவரும்318,942,480154,946,92626,834,838396,556
இந்து மதம்216,734,586105,829,12420,218,780329,076












வயது0-11-22-33-44-55-1010-15
இந்துமதம் பிடித்தவர்7596121600347536931,02,29327,79,124
மற்ற மதம் பிடித்தவர்59749412572837670785037232147

ஐயகோ! என் மனம் குமுறுகின்றது. இந்நிலையில் எழுதினால் கனியிருப்ப காய்கவர்ந்து கயவர்கள் மீது வசைமாரி பொழிந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி

பீமாராவும், இராமனும்......


உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்க்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.


இன்று அயோத்தி இராமன் கோயில் உள்ள இடம் தங்களுடையது என்று முசல்மான் அன்பர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் படையெடுத்து வந்தபோது இடத்தையும் கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த இடத்தை இங்கிருந்தே பறித்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அந்த இடத்தை இழந்தவர்கள் மீட்டுக்கொண்டனர்.
இதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் நாம் அதை மீட்டுக்கொண்ட விதம்....
புராணத்தையும், வரலாற்றையும் குழப்பிக்கொள்ளும் நமக்கு, வரலாற்று அறிவோ, வரலாற்று சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வோ இல்லை.
அப்படி இருந்தால் 400 வருடங்களுக்கு முந்தைய ஒரு வரலாற்று சின்னத்தை உடைத்திருப்போமா?
அயோத்தியில் இடமா இல்லை?

இராமன் ஓர் அப்பட்டமான கற்பனைப் பாத்திரம். அந்த கற்பனை இராமனுக்கு கோயில் கட்ட நாம் மிகை உணர்ச்சி வயப்படுகிறோமோ என ஐயுறுகிறேன்.

ஆனாலும் திசம்பர் 6ஐ பொறுத்தவரையில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவன் என சொல்லக்கூடிய ஒருவரின் நினைவு நாளை ஒட்டுமொத்த இந்தியர்களையும் மறக்கடிக்கவைத்ததில் நமக்கு வெற்றிதான்.

தமிழ் குடிதாங்கிகளின் கவனத்திற்கு...

(அவ்வையார் - அதியமான் நட்பின் நெருக்கம்)


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

....................................
....................................

--------------------------------, என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி


"சிறிது கள் கிடைக்கும் போது எனக்கு கொடுத்து, நிறைய கிடைக்கும் போது, நான் பாட நீ குடித்து மகிழ்வாயே.
பழைய உடுக்கை களைந்து, உடுக்க புதிய உடுக்கை தருவாயே! மாமிசம் கலந்த சோறை வெள்ளிக் கிண்ணத்திலே தருவாயே!"
(பி. கு.. அவ்வையாரை பெருமைப்படுத்தவே வெள்ளிக்கிண்ணம், வெள்ளிக்கிண்ணத்திற்கு தீட்டு கிடையாது என்பதற்காக அல்ல)

தமிழின் காலச்சுவட்டில் பெண்களின் நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு இது.

தமிழ் குடிதாங்கிகள் என கூறிக்கொள்பவர்கள், முதலில், தமிழரின் காலச்சுவடை முழுவதும் தெரிந்துகொள்ளட்டும்.

தூயதமிழ்ச் சொற்களை தட்டியில் மூலைக்கு மூலை கட்டி, அனைவரும் தூய தமிழில் பேசுங்கள் என்று கூறிக்கொண்டும், தங்களின் பெயர்த்திகளை ஆங்கிலம் மட்டுமே படிக்கவைத்தும், காலத்தை போக்குவதை நிறுத்திவிட்டு,

தமிழ் பெண்களின் முந்தைய நிலை, இப்போதைய இழிவு நிலை, அதற்கு எந்த தந்திர நரிகள் காரணம் என விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.

அஃதன்றி "சோ" போன்ற ஆணாதிக்க நரிகளையும் மீறி, "பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள்" எனும் அச்சமூகத்திலிந்து தளை உடைக்க முயலும் சுஹாசினியை பாராட்டாமல், அவரை எதிர்க்கும் உங்களை "அரைவேக்காடுகள்" என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி,
-பூங்குழலி

வெறுப்பதை நிறுத்துங்கள்...

பேராசிரியர் Manuel Aguilar சொல்கிறார்.


உன்னால் வெறுப்பை வெறுப்பால் எதிர்க்க முடியாது.
இரண்டு பன்றிகளை ஒன்றாக வைத்து, குதிரையை பெற முடியுமா? முடியாது, மீண்டும் பன்றிகள் மட்டுமே கிடைக்கும்.
நாம் வெறுப்பை அன்பினால் மட்டுமே வெல்ல முடியும்.


சரி விஷயத்திற்கு வருவோம்.

நீங்கள் ஹிட்லரை வெறுப்பதால் வெறுப்பு மட்டுமே வளரும். ஆனால் அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டோமானால்,
ஏன்றேனுமொரு நாள் நம்மில் ஒருவருக்கொருவர் வெறுத்துக் கொள்ள மாட்டோம். நம்மில் அன்பு மட்டுமே இருக்கும். இதுதானே நாம் அனைவரும் விரும்புவது...


ஹிட்லர் நம் அனைவரையும் போல பூனை வளர்த்தார். இசையை விரும்பினார்.

ஹிட்லர் யூதர்கள் கொல்லப்படுவதை விரும்பினார். இதை நீங்கள் தவறென நினைக்கக்கூடும், இதுதான் உங்களின் வெறுப்புக்கு காரனமென்றால், நீங்கள் செய்யவேண்டிய சுலபமான செயல் இதுதான்.


தயவு செய்து வெறுப்பதை நிறுத்துங்கள்.


அவரை உங்கள் இதயத்தில் அனுமதித்து, உங்கள் வெறுப்பை மீறி அவரை உயர்த்த முடியவில்லையென்றால்... யூதர்களைவிட நீங்கள் நல்லவரில்லை... அவர்கள் நம் ஒரே உண்மைத் தேவன் யேசுவைக் கொன்றவர்கள்.


இது எப்படி இருக்கு?.

பூங்குழலி.

யாகாவாராயினும் நாகாக்க...

முட்டாள்களே!
- ஆ, இதுதானே கருத்து சுதந்திரம் ;)) -

"கிழித்திருப்பேன்" என்பது மறைமுகமாக கன்னித்திரையை குறிக்கும் ஆணாதிக்க சிந்தனையே, அதை பரமகுடி அம்மையாரும் கூறியதால் எனக்கு மகிழ்ச்சியே.
(வேறென்ன சொல்ல...பெண்ணியம் வளர்கின்றது...)

ஒன்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்",தங்கர் பச்சானின் கருத்து சுதந்திரத்திற்கு குஷ்பு எவ்வளவு மரியாதை கொடுத்தார்.
இன்றைக்கு அவருக்கே அது நடக்கின்றது.

ஓர் ஆணும் பெண்னும் அவர்களிடையே உறவு கொண்டால் AIDS வந்துவிடாது.(உடல்களுக்கு திருமணம் ஆனது எப்படி தெரியும்?).
பாதுகாப்பற்ற ஊர்மேயலால்தான் AIDS வரும்.

மைக் கிடைத்த ஆர்வக்கோளாறில் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பொறுப்பில்லாமல் பாழடித்துவிட்டார்கள்.

பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.
காலத்தை வீணடிக்காமல் அவரவரின் வேலைவெட்டியை பாருங்கள்.

வணக்கம்.
-பூங்குழலி.

கற்பெனப்படுவது.......


இதுகாறும் அமைதிப் பூங்காவாய் இருந்த தமிழ் கூறும் நல்லுலகம் இன்றைக்கு ஏன் கொந்தளித்துப் போயிருக்கின்றது?.

திருமணத்திற்கு முன் புணர்ச்சி தவறில்லை, ஆனால் பாதுகாப்பு முக்கியம்......" - இது ஆய்வுக் கட்டுரைக்கு ஊடான கருத்து, ஏற்றுக்கொள்ள வேண்டியதே... ஆனால் சொன்னவிதம்....

"தமிழ் நாட்டில் எத்தனை பேர் ஒழுக்கமானவர்கள்?..." - இது கிணற்றுத்தவளையின் வாய்க்கொழுப்பு.

"திருமனத்திற்கு முன் புணர்ச்சி தவறில்லை" என்ற கருத்தை, "எங்கிருந்தோ வந்த...." என்ற பேச்சுக்கு ஆளாகக்கூடிய குஷ்பு தமிழர்களைப் பார்த்து சொல்லவேண்டிய அவசியமில்லை.

"கொக்கும் உண்டே யாம் கலந்த ஞான்றே..." என்று காலச் சுவடுகளை கொண்டது இத்தமிழ் நாடு.களவுப்புணர்ச்சியும் ( Pre Marital Sex), பெற்றோரைப் பிரிந்து தலைவனுடன் உடன் போக்கும் தமிழினத்திற்கு புதிதல்ல.

பின் ஏனிந்த கொந்தளிப்பு?.

தற்காலத்தில் கற்பு என்ற பதத்தை பார்க்க வரும்போது அது புணர்ச்சியுடன் சம்பந்தப்படுத்தபட்டு அதில் தகாத உறவு (Extra Marital Sex) தவிர்க்க வேண்டியதாகிறது.
ஒரு தலைவி தலைவனுடன் கலந்து பின் அவனையே மணந்துகொண்டுவிட்டால், அப்பொழுதும் அவள் கற்புடையவளே..

ஆனால் சந்தர்ப்பவசத்தால் வேறொருவனை மணந்துகொண்டுவிட்டால்..... இங்குதான் இடிக்கின்றது.

ஆகவே கற்பை சரியாக புரிந்து கொள்ளாமல் அரை வேக்காட்டுத்தனமாக, கலந்து கட்டி குழப்பியதால் வந்தது வினை.

தலைவன் தலைவி என்று முகம் தெரியாதவர்களைப் பற்றி பேசிக்கொன்டு இருந்தால் அதன் பாதிப்பு தெரியாது.

ஒரு தாய் தனது மகளிடம் , தான் களவுப் புணர்ச்சி கொண்ட ஒருவரை அறிமுகப்படுத்த நேரிடும்போது தாயை பற்றி மகளுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?

தனிமனிதனாக(இருபாலருக்கும்) செய்யும்போது தவறு மாதிரி தெரியாத பல செயல்கள், உறவு முறைகளுடன் பார்க்கும்போது, பூதாகரமாகின்றன.

உறவுகளின் மதிப்பு, உடல் புணர்ச்சி. இவற்றில் இனத்திற்கு இனம் அதன் முக்கியத்துவம் மாறுபடுகின்றது.

இதனால் தான் குழப்பம்.

தலைப்புக்கு பதில்தான் என்ன?

கற்பெனப்படுவது.......

1. சொல்திறம்பாமை.( இது இரு பாலருக்கும் பொது).
2. புரிசை(Fort wall)

3. Vow, decision, determination
நிறுத்துவனென்னுங் கற்பினான் ( கம்பரா. கும்ப.307)

4. களவுக்கூட்டத்துக்குப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம் (நம்பியகப். 26)
(Life of a house holder after his union with a bride of his choice had been ratified by marriage ceremonies )


- பூங்குழலி.

அடுத்து சுகாசினியின் கருத்தைப் பற்றி.....