யாகாவாராயினும் நாகாக்க...

முட்டாள்களே!
- ஆ, இதுதானே கருத்து சுதந்திரம் ;)) -

"கிழித்திருப்பேன்" என்பது மறைமுகமாக கன்னித்திரையை குறிக்கும் ஆணாதிக்க சிந்தனையே, அதை பரமகுடி அம்மையாரும் கூறியதால் எனக்கு மகிழ்ச்சியே.
(வேறென்ன சொல்ல...பெண்ணியம் வளர்கின்றது...)

ஒன்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்",தங்கர் பச்சானின் கருத்து சுதந்திரத்திற்கு குஷ்பு எவ்வளவு மரியாதை கொடுத்தார்.
இன்றைக்கு அவருக்கே அது நடக்கின்றது.

ஓர் ஆணும் பெண்னும் அவர்களிடையே உறவு கொண்டால் AIDS வந்துவிடாது.(உடல்களுக்கு திருமணம் ஆனது எப்படி தெரியும்?).
பாதுகாப்பற்ற ஊர்மேயலால்தான் AIDS வரும்.

மைக் கிடைத்த ஆர்வக்கோளாறில் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பொறுப்பில்லாமல் பாழடித்துவிட்டார்கள்.

பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.
காலத்தை வீணடிக்காமல் அவரவரின் வேலைவெட்டியை பாருங்கள்.

வணக்கம்.
-பூங்குழலி.

0 பின்னூட்டங்கள்: