திங்கள், அக்டோபர் 30, திபி 137(Monday, October 30, 2006)

இது உண்மையா?

எனக்கு வந்த மயிலில் கீழ்கண்டவாறு இருந்தது.
யாருக்கேனும் இது குறித்த தகவல் தெரியுமா?
இதன் நம்பகத்தன்மை என்ன?


Dear all ,
ICICI ATM / Debit cards can be used at SBI ATMs to withdraw money and most shocking thing is, it does not ask for your PIN**. Even if it asks for pin and if u cancel it, it goes on to the next screen and enables you to withdraw cash. This security vulnerability was shown live on India TV news channel at SBI ATM in Hyderabad. So please take utmost care of your ICICI ATM / Debit cards to avoid any such misuse.


நன்றி,

நாம் அனைவரும் இந்துவே தொடர் தொடர்பாக...

அன்பர்களே!..

அன்பர் ஹரிஹரன் அவர்களின் பதிவைப் பார்க்கும்போது, அவர் கூறியுள்ள கருத்துகளில் சில ஏற்புடையவனாக உள்ளன. தீராத விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கும்போது, கீதையைப் படித்தால், நம் பகவான் கூறும் சில கருத்துக்கள் நமக்கு புரியாமற் போகலாம்.

ஆகையால் கீதை என்பது "அனைவருக்கும் அல்ல". அது "வயது வந்தோர்க்கு மட்டும்" என்பது போல குடும்பிகள்/மனமுதிர்ந்தவர்(முறிந்தவர் அல்ல)/குறிப்பிட்ட வயது வந்தவர்க்ளுக்கானது அல்லது சாமியார்களுக்கானது என தெளிந்தேன்.

ஏற்கனவே, "திராவிடர்களும் ஆரியர்களே", "பகவானின் தன்முரண்பாடு" போன்ற பதிவுகளை எழுதி சேமித்து வைத்திருந்தாலும், அன்பர் ஹரிஹரன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் சரியென இருத்தலாலும், இப்பதிவுகளை மேற்கொண்டு வெளியிடலாமா என்ற மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நம்மில் ஒவ்வொருவருக்கும் தற்போதைய உருப்படியானவை/முக்கியத்துவமானவை என்ற பல்வேறு கோணங்கள் இருக்கும். அதில் இந்த கீதை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததாய் இருக்கலாம்.

ஆகவே,
இங்களின் மேலான கருத்துக்களை சார்ந்து, நாம் அனைவரும் இந்துவே தொடரின் தொடர்ச்சி இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதரவுக்கு நன்றி..

செவ்வாய், அக்டோபர் 24, திபி 137(Tuesday, October 24, 2006)

நாம் அனைவரும் இந்துவே - 2

சென்ற நாம் அனைவரும் இந்துவே பதிவிலே கூறியிருந்ததைப் படித்துப் பார்த்த பெருமக்கள் பலர், கீதையை சொல்லியுள்ளதை பின்பற்றியே ஆகவேண்டுமா?

அல்லது வேதங்கள் மற்றும் உள்ள சாஸ்திரங்களை பின்பற்றவேண்டுமா என புத்தி தடுமாற்றமடைந்ததாக கூறியுள்ளனர்.
விதிவழுவிய முறையில் வணங்கும் இந்துக்களான, கிருத்துவர்கள், இசுலாமியர்கள் போன்றோர் கேட்ட"வேதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதா?

பகவத்கீதைதான் உயரியதா?கீதையில் சொல்லிவிட்டால் நாம் எல்லாம் அதை பின்பற்ற வேண்டுமா?இதுபற்றி ஏதேனும் தெளிவான கருத்து கிடைக்குமா?வேதங்களைவிட பகவத் கீதை முக்கியமா?எதற்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் தரவேண்டும்? என்று பற்பல கேள்விகளுக்கு இப்பதிவுஉபயோகப்படும் என நம்புகிறேன்.


"அனைத்து அறநூல்களினின்றும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த கருப்பஞ்சாறு ஸ்ரீமத்பகவத்கீதை.எண்ணற்ற அறநெறி நூல்களின் ஒரு கருவூலம் இதுவே எனினும் மிகையன்று.கீதையை ஒருவன் நன்கு தெளிவாகப் புரிந்துகொள்வாயானேயானால் அவனுக்கு எல்லா அறநூல்களின் அறிவும் தானேவந்தமையும்.வேறு ஒரு முயற்சி தேவையில்லை."


"ஸர்வ ஸாஸ்த்ரம்யீ கீதா (பீஷ்ம - 43/2) - அனைத்து அறநூல்களையும் தன்னுள் கொண்டது கீதை என்றல்லவா ஸ்ரீமகாபாரதம் பகரும். இங்ஙனம் கூறுவதும் போதாது.ஏனெனில் அனைத்து நூல்களும் வேதங்களின்றும் தோன்றியவை; வேதங்களோ ப்ரும்மதேவனின் முகத்தினின்றும் வெளிவந்தவை. ப்ரும்மதேவனோ பகவானின் உந்தித்தாமரையிலே உதித்தவர். இவ்வாறு ஸாஸ்த்ரங்கட்கும், ஸ்ரீபகவானுக்கும் இடையே பெருத்த இடைவெளி உள்ளது.

ஆனால் கீதையோ பகவானின் திருமுகத்தாமரையினின்றும் வெளிப்போந்தது. ஆகவே இது அனைத்து சாஸ்திரங்களிலும் மேம்பட்டது எனின்மிகையாகாது.


ஸ்ரீபகவான் வேதவ்யாஸரே கூறுகிறார்---

கீதா ஸூகீதா கர்தவ்யா கிமத்யை ஸாஸ்த்ரங்க்ரஹை:யா ஸ்வம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநி: ஸ்ருதா
(மஹா. பீஷ்ம. 43/1)


"கீதையை நன்கு கேட்டு, படித்து, பாடி பிறருக்குக் கூறி மனதில் தேக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.பிற நூல்கள் எதற்கு?ஏனெனில் இது பகவான் ஸ்ரீபத்மநாபனின் திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்ததல்லவா?

கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. சாஸ்திரங்களோ கங்கையில் நீராடுவதன் பயன் முக்தி என்கின்றன.கங்கையில் நீராடுபவன் என்னவோ முக்திபெறலாம். பிறரை கரையேற்ற இயலாது.

ஆனால் கீதையாகிய கங்கையில் மூழ்கி எழுபவன் தானும் முக்திபெற்று பிறரையும் முக்தி பெறவைக்கிறான். கங்கை பகவானின் திருவடித்தாமரையிலே தோண்றினாள்.ஆனால் கீதையோ பகவானின் திருமுகத்தாமரையினின்றும் தோன்றியது.

கங்கையோ தன்னைத் தேடிவந்து நீராடுபவனையே முக்திபெறச்செய்கிறது. ஆனால் கீதையோ வீடுதோறும் சென்று அங்குள்ளோர்க்கு முக்தி வழியைக் காட்டுகிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறப்புடைத்து.
கீதை காயத்ரியை விடவும் சிறந்தது. காயத்ரியை ஜபிப்பவன் முக்திபெறுகிறான். உண்மைதான்.அவன் மட்டுந்தானே?

ஆனால் கீதையைப் பாராயணம் செய்வோன் தானும் வீடுபேறு பெற்று பிறனும் வீடுபேறு பெற அருளுகிறான்.
முக்தியளிக்கும் பகவானே அவனைச் சார்ந்தவனாகும் போது முக்தியைப் பற்றிக்கூற என்ன உளது?
அவனுடைய திருவடிகளிலே கிடக்கிறது முக்தி.முக்தியெனும் சத்திரத்தையே திறந்துவைக்கிறான். பகவானைவிட கீதையே பெருமையுடைத்து என்பது சரிதான்.

பகவான் கூறுவதையே கேட்போமே...
லீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்கீதாஜ்ஞாநமுபாஸ்த்ரிய த்ரிலோகத் பாலயாம்யஹம் (வாயுபுராணம்)

"கீதையை அண்டித்தானே நானே இருக்கிறேன்!அதுதான் எனது உயரிய மாளிகை. அதன் துணைகொண்டுதானே மூவுலகையும் காக்கிறேன்"


அன்பர்களே..
கீதையின் முக்கியத்துவம் புரிந்ததா?.....
நன்றி - 273005

திங்கள், அக்டோபர் 23, திபி 137(Monday, October 23, 2006)

நாம் அனைவரும் இந்துவே...


அரசியல் திரா'விடப்'ப் பெத்தடினாக ஊசியில் அடிக்கடி ஏற்றி தமிழர்களிடத்தில் பகவத் கீதையில் சொல்லப் பட்ட கருத்துக்கள் சூத்திரனான(!?) திராவிடனுக்கில்லை ஆரிய வந்தேறி பார்ப்பனக்கூட்டம் தமிழன் மேல் திணித்தது என்று ஜல்லியடித்து நடுநடுவே அவர்களுக்கு வசதியாக ஒன்றிரண்டு வரிகளை தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது

இத்தகைய திராவிடப் பெத்தடினை அடிக்கடி தமிழர்களிடத்தில் ஏற்றிவிடுவதால் தேசிய கஞ்சாவை அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

ஆனாலும் வேலைகள் பல இருந்தாலும் நாம் சில மணித்துளிகளையாவது செலவழித்து பகவத் கீதையினை பரப்பவேண்டியது கடமையாகும்.

இந்துமதத்தினை, அதன் நோக்கத்தினை முழுதாக புரிந்துகொள்ளாத அரைகுறைகள், இந்துமதம் எனபது என்னவோ நால்வகை வருணத்திற்கும் மற்றும் பஞ்சமர் என்று திரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்குமானது என்ற எல்லைகளுடன் நின்றுவிடுகிறார்கள்..

ஆனால் உண்மையில் இந்து என்பவர்கள் உலகிலேயே உயர் பிறப்பாகிய, உழைத்து வாழும், அடுத்தவன் வயிற்றை அடித்துப்பிழைக்காத, தகுதியின் மொத்த இருப்பிடமான பிராமணர்கள், எந்நேரமும் ரத்த வெறியோடு வெட்டு குத்து, போர் என்று இருக்கும் ஷத்ரியர்கள், அருளை நாடாது, இவ்வுலக வாழ்க்கைக்கு பயன்படுகிற பொருளை நாடும், அப்படி ஜடப்பொருலையே நினைத்ததால், ஜடபுத்தியே வலுத்து இருக்கும் வைசியர்கள், மற்றும் அடிமைத்தொழில் ஒன்றையே செய்ய இயலும் சூத்திரர்கள், பஞ்சமர்கள், கிருத்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், புத்த, சமண மற்றும் இன்னபிற மதங்களை பின்பற்றுபவர்கள் எல்லாரும் இந்துக்களே என்று ஆணித்தரமாக கூறிச்சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.

**** இல்லாத காரணத்தினால் சிலர் இதை வெளியிட/ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்.
ஆனால் உண்மையைச் சொல்வதுதானே நமது கடமை...

சிலர் ஈசன் என்பார், சிலர் ஈசா நபி என்பார் சிலரோ இயேசு என்பார்.
பெயரில் என்ன இருக்கிறது. நாம் அனைவரும் வணங்குவது பரம்பொருளைத்தானே...

பகவான் என்ன சொல்லியுள்ளார் என்று பார்த்தோமானால்.....
கீதையின் ஒன்பதாவது அத்யாயமான "ராஜவித்யா ராஜகுஹ்யயோகம்"ல் 23ம் பாடலில்

யேsப்யன்யதேவதா பக்தா யஜந்தே ஸ்ரத்தயாsந்விதா:தேsபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்

வரிக்கு வரி அருஞ்சொற்ப்பொருள்

கௌந்தேய - குந்தியின் மைந்தா - அர்ஜூன!
ஸ்ரத்தயா அன்விதா - சிரத்தையோடுகூடிய
யே பக்தா - எந்த பக்தர்கள்
அன்ய தேவதா: அபி - மற்ற தேவதைகளையும்
யஜந்தே - வணங்குகிறார்களோ
தே அபி - அவர்களும்
அவிதி பூர்வகம் - விதி வழுவியர்களாய்
மாம் ஏவ - என்னையே
யஜந்தி - வணங்குகிறார்கள்.

சரி இதன் முழுமையான விளக்கப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்குகிறார்கள்.

விரிவாக்கம்:

சிரத்தையோடு இருத்தல் என்பது ஆஸ்தீக புத்தியுடையவராயிருத்தல் அல்லது தெய்வம் துனைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம்.
அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.

அதாகப்பட்டது,
தெய்வம் உள்ளது, அது நமக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கை
இருக்கும்எந்த ஆத்திகரும் தன்னையே வணங்குவதாக கூறுகிறார் பகவான்.
பின்பற்றும் விதிகள் எதுவாய் இருந்தால் என்ன?
பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும் கரைகானாத கடல் அல்லவா இறைவன்.
புண்ணிய நதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன.அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். ஆகவே கடவுளை அடையத்தகாதவர் எவருமில்லை..

ஆகவே மனிதர்கள் ஜாதி மதம் என்று வித்யாஸங்கள் பல இருந்தாலும் அனைவரும் இந்துவே.அனைவரும் வணங்குவது பகவான் கிருஷ்ணனையே.
பகவான் சொன்ன வழியில் நடக்காதவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால்..

9:11
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாச்ரிதம்பரம்
பாவம ஜானந்தோ மம பூதமஹேச்வரம்.
அதாவது...
என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாய்யிருப்பதையும் அறியாதமூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.

அடுத்த பாடலிலே(9:12) அவர்களது இயல்பையும் கூறுகின்றார்.அது..
வீண் ஆசையுடையவர்கள், பயன்ப்டாச் செயலாளர்கள், கோணலறிவுடையவர்கள், விவேகவில்லாதவர்கள்மயலூட்டுகின்ற ராக்ஷச அசுர இயல்புடையவர் ஆவர்.

இறைவன் என்பவன் அனைத்தையும் கடந்தவன்.அதாவது
கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை.
ஜடாகாசத்தை எப்பொருளும்சிதைப்பதில்லை.
பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது.
இன்னும் கேட்டால் இவ்வுலகில் இருக்கும் அனைத்திலும் இறைவன் இருக்கிறான்.அவனுக்கு எல்லாம் ஒன்றே..
ராமஸாமி செருப்புஸாமியால் கல்ஸாமியை அடித்துவிட்டதாக சில அறிவிலிகள் பிதற்றவும் செய்கின்றனர்.ஆனால் பகவான் அனைத்தையும் கடந்தவராயிற்றே..அவர் கருணைக்கடலல்லவா?
தலையில் நர்த்தனம் ஆடியே கொன்றாலும், காளிங்கன் கேட்டவரத்தைக் கொடுத்தவராயிற்றே..
அவர் புஷ்பத்திற்கும் செருப்புக்கும் வித்யாஸம் பார்ப்பாரா என்ன?
அதனேலேயே ராமஸாமிக்கு சொர்க்கத்தைக் கொடுத்து, மேலும் பூலோகத்திலே மானுடர் மூலமாக சந்தன அபிஷேகம் அணிவித்த கருணைக்கடலல்லவா அவர்.

பகவானே கூறிவிட்டால் அதற்கு மறுபேச்சேது.
ஆகவே பாவிகளே..மனந்திரும்புங்கள்.

உங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என்ற அச்சமா?கவலைவேண்டாம்.

"பகவான் இப்படி சொல்லியிருக்கிறார், ஆகையால் நீங்களும் இந்துதான், இதை நீங்கள்
ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.ஆனால் மதிமயக்கத்தின் காரணமாக இதை
நீங்கள் ஏற்க மறுத்தாலோ அல்லது ஏதேனும் சந்தேஹம் இருந்தால் மட்டும் பதில் கடிதம்
அனுப்பவும்".
என்று அனானி கடிதத்தை எழுதி இரண்டு மாதங்களுக்கு முன் போப் முதலான மதத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
ஒரு பதில் கடிதம் கூட கானோம்.

நீங்கள் எந்த வழியினைப் பின்பற்றினால்தான் என்ன?
புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்யாஸம் கண்டுபிடிக்கமுடியாது.
அதுபோல பக்தி எனும் புயற்காற்று அடிக்கும்போது அவனிடம் ஜாதிமத பேதம் இருக்கமுடியாது.

உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் வழுவிய விதியைக் கொண்ட கிருத்துவம் மற்றும் அவனின் எதிரியாய் நினைக்கும் இசுலாம் போன்ற முறையை பின்பற்றாமல்,
நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழும் இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து திருந்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,

வியாழன், அக்டோபர் 5, திபி 137(Thursday, October 05, 2006)

தொல்காப்பியம் வருணபேதத்தின் ஊற்றுக்கண்ணா?

குறிப்பு : இது ஓர் எதிர்வினைப் பதிவானாலும் விவாதப் பதிவல்ல, இது ஒரு விழிப்புணர்வுப் பதிவு.
மேற்கோள்கள் போன்றவற்றில் முடிந்தமட்டும் தமிழ் சொற்களை கொடுத்துள்ளேன்.

எச்சரிக்கை: இப்பதிவில் சாதிப்பெயர்கள் வெகுவான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உண்மையை சொல்லப்புகும் நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. யார் மனதையும் புண்படுத்தும்
நோக்கம் கடுகளவும் இல்லை. நடுநிலைவாதிகள், அப்பாவிகள் மனதை தேற்றிக்கொண்டு இப்பதிவை படிக்க வேண்டுகிறேன்.

தொடர்பான பதிவுகள்.
http://vittudhusigappu.blogspot.com/2006/09/blog-post_16.html
http://karuppupaiyan.blogspot.com/2006/09/blog-post_18.html
http://karuppupaiyan.blogspot.com/2006/09/blog-post_20.html


வருணபேதத்தின் ஊற்றுக்கண் தொல்காப்பியம், என்று பல இடங்களில் இருந்தும் மேற்கோள் எடுத்துக்காட்டி,
தொல்காப்பியத்தில் இருந்துதான் மநுநீதி தோண்றியது என்பது போன்ற பற்பல மாயா உலகத்தைக் காட்டி,
தமிழின்மீதும் தமிழரின் மீதும் பழியைச் சுமத்தும் வகையில் ஒரு பதிவை இட்டுள்ளார் அன்பர் விசி அவர்கள்.

தமிழ்ச்சொல் இருக்கிறதா?

அவர் சொல்லிய செய்தியிலேயே/தலைப்பிலேயே அவரின் சொன்ன செய்தியின் உண்மை/தரம் பல்லை இளித்துவிட்டதாக நினைக்கிறேன்..
ஊற்றுக்கண் சரி, தொல்காப்பியம்சரி, ஆனால் வருணபேதம் என்பது தமிழ்ச் சொல்லா?
தொல்காப்பியம்தான் ஊற்றுக்கண் என்றால், வருணம், ஜாதி போன்ற சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் இருக்கிறதா என சிந்தித்துப் பாருங்கள்.


வகுப்பு மற்றும் சாதி.

அப்பதிவின் ஆரம்பம் முதல் பின்னூட்டங்களின் முடிபு வரை, ஒரு சிலரைத் தவிர, சமுகம் என்று ஒன்று இருந்தால் அதில் பல்வேறு பிரிவினைகள் இருக்கச் செய்யும் என்ற செய்தியுடன் சாதியையும் சேர்த்து நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு சாதிக்கும், வகுப்பிற்கும் இடையேயான வேறுபாடு தெரியவில்லையா என்ன? அல்லது கண்ணிருந்தும் குருடராய், மூளையிருந்தும் மூடராய் கடைசி வரை இருக்க போகிறார்களா?

இங்கே பகுத்தறிவு வெங்காயம், வைக்கம் வீரர், தந்தை பெரியார். அவர்களின் கூற்றை மேற்கோள் கொடுக்க விரும்புகிறேன்.

"ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன.
அதாவது, சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும்.
சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது.
தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை,
அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது."

தொல்காப்பிய தொழில்முறை வகுப்புகள்
கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்ற வகுப்புகளை பிறப்பின் அடிப்படையில் எங்கேனும் வகுக்கப்பட்டுள்ளனரா?

தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அத்தனை வகை பெயர்களும் தொழில் தன்மையால் ஏற்பட்ட குறியீட்டு பெயர்களாகும். எங்காவது இந்த தொழில் செய்பவன் மற்றதொழில்களை செய்யக்கூடாது என்று தமிழில் கூறப்பட்டுள்ளதா? குயவர் முதல் மன்னன் வரை கற்றறிந்தோர் இருந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், ஏதேனும் உளறல்/வசவு உச்சரிக்கும் போது மற்றவன் அதைக் கேட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றவேண்டும்
என்று சொல்லியிருக்கிறதா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.


மநு (அ)தர்ம சாதி முறைகள்.
சரி, இப்போது மநுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.

விராத்ய பார்ப்பனனும் பெண்ணும் பெறும் பிள்ளை பூர்ஜ கண்டன், ஆவந்தியன், வாடதானன், புட்பதன், சைகன் என்று நாட்டுக்கேற்றவாறு பெயர்.
விராத்ய சத்ரியன் பெறும் பிள்ளை = மல்லன், நிச் விடயன், கரணகசன்
விராத்ய வைசியன் = சுதன்வா, ஆச்சாரி, காசேன், விசன்மா, மைத்திரன், சாத்தவன்.

அநுலோமர் - பிரதிலோமர்.
தம் வருணத்திற்கடுத்த, அடுத்த வருணத்துப் பெண்ணிடம் பெறும் பிள்ளைகள் அநுலோமர்.
பார்ப்பன + வைசியப் பெண் = அம்பட்டன்
பார்ப்பன ஆண் + சூத்திர பெண் = நிடாதன்/பாரசவன்
சத்ரிய + சூத்திர = உத்கிரன்.

சத்ரிய, வைசிய சூத்திரன் தம் மேல் வருணத்துப் பெண்ணை மனைவியாகக் கொண்டு பெறும் பிள்ளை - பிரதிலோமர்.

சத்ரிய + பார்ப்பன = சூதன்
வைசிய + பார்ப்பன = வைதேகன் (வைதேகி என்ற பெயருக்கு இதனுடன் தொடர்புண்டா எனத் தெரியவில்லை)
வைசிய + சத்ரிய = மாகதன்
சூத்திரன் + பார்ப்பன = சண்டாளன்.
சூத்திரன் + சத்ரிய = சாத்தா
சூத்திரன் + வைசிய = அயோகவன்

பார்ப்பன + அம்பட்ட = ஆபிடன்
பார்ப்பன + உத்கிர = ஆவிரதன்
பார்ப்பன + அயோகவப் = திக்வணன்
சூத்திரன் + நிடாத = குக்குடகன்.

அநுலோமர் உயர்வு, பிரதிலோமர் தாழ்வு
அநுலோமர் தாயின் சாதி, அவர்கானவை தாய்சாதி சமஸ்காரங்கள்.
பிரதிலோமர் சண்டாளன், சாத்தா, அயோகவன் ஆகியோர் அறப்பணி ஆற்றுதல் கூடாது.
பார்ப்பனனின் அநுலோமப் பிள்ளை வேள்வித் தவங்களால் சிறப்புப் பெறுவான்.
பார்ப்பனனின் சந்திரிய, வைசிய அநுலோமர் உபநயன உரிமையுள்ளவர், சூத்திரப் பெண்
பெறும் அநுலோமர்க்கு அவ்வுரிமை இல்லை.
பார்ப்பனன் மணம் புரியாது சூத்திரச்சியுடன் பெறும் அநுலோமர், பார்பனத்தியை மணம் புரியாது சூத்திரன் பெறும் பிள்ளை இருவருக்கும் உபநயன நற்கருமங்கள் ஆற்றும் உரிமை இல்லை.

சண்டாளச் சாதிகள்.
நிடாதன் + சூத்திர = புற்கசன்
நிடாதன் + வைதேக = ஆகிண்டிகன்
நிடாதன் + அயோகவ = மார்க்கவன் (இவன் ஆர்யவர்த்ததில் செம்படவன் எனப்படுவான்)

வைதேகன் + அம்பட்ட = வேணன்
வைதேகன் + அயோகவ = மைத்திரேயன்(குடும்பாண்டி எனவும் அழைக்கப்படுவான்)
சாத்தா + உத்கிர = சுவபாகன்.

சண்டாளன் + நிடாத = அந்தியாவசாயி

சண்டாளன் + வைதேக = பாண்டு

சண்டாளன் + புற்கவ = சோபாகன்

தஸ்யூ(திருடன்) + அயோவக = சைந்திரன்

ஆபீரன், ஆவிரதன், திக்வணன், புற்கசன், குக்குடகன், சுவபாகன், வேனன் ஆகியோர் அந்தராளர் சாதியார்.

அம்பட்டன், உக்கிரன் ஆகிய அநுலோமர், சாத்தா வைதேகன் ஆகிய பிரதிலோமர்
அனைவரும் பாகியர்(தீண்டத்தகாதவர்) அநுலோமர், பிரதிலோமர் கூடிப் பெறுவசரும் அவ்வாறே.

சண்டாளர் தொழில்:

இழிபிறப்பாளன் ஒருவன் பார்ப்பனப் பணியைப் புரியும் போதும் அவன் இழிபிறப்பாளன் தான்,
இழிதொழில் யாது புரிந்தாலும் பார்ப்பனன் எப்போதும் இழிபிறப்பாளன் ஆகான். அவன்
பிறப்பு உயர்பிறப்புதான் பிரம்மனின் ஆணை அவ்வாறு.

என்று பிறப்பின் அடிப்படையில் சாதியை சொல்லியுள்ளார்கள். இது மட்டுமா,
இன்னும் சண்டாளர் குணம், சண்டாளர் வாழ்க்கை, மொழி, நாடு போன்ற சமத்துவ கொள்கைகள் மநுவில் இருக்கின்றன.


தமிழகத்தில் இளவரசரைத் தாக்க வரும் மத யானையை வேலெறிந்து, இளவரசரைக் காப்பாற்றும் ஒருவன், கைக்கோளப் படையில் சேர வாய்ப்புண்டு. அதில் பணிபுரிவதால் கைக்கோளராவான். இதே போன்று முத்திரையர் என்ற படைப்பிரிவும் உண்டு
ஆனால் மநு அப்படியா சொல்கிறது.


தொல்காப்பியத்திலிருந்து மநு தழுவப்பட்டிருந்த்தால்...
இந்த பதிணென் வகுப்புக்களுக்கு ஈடாக ஏதேனும் சாதிப்பெயரை எடுத்துக்கூறுங்களேன்.

பொய்யும் புரட்டும்:
இத்தகைய புரட்டுக்கள் ஒன்றும் தமிழர்க்குப் புதிதல்ல
இந்த பதிணென் வகுப்புகளை பலபட்டடை சாதிகள் என்று அதற்கு பொருளும் கொடுத்து, பொய்யும் புரட்டும் பனவனுக் குரிய என்பதை மெய்யாக்கும் விதமாக நெடுங்காலந்தொட்டே இத்தகைய திரித்தல் வேலைகளை (சமிபத்திய சீனிவாச ***** காலத்தில்கூட) செய்துகொண்டு வருகின்றனர்.

இங்கே அன்பர் விசி அவர்களின் பதிவில் செல்வகுமார் என்ற அன்பர் இட்ட
பின்னூட்டக் கருத்தையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

//வி.சி அவர்களே,
கீழ்க்காணும் கருத்தை நான் ஓரிடத்தில் எழுதியுள்ளேன். பேர் எழுதாத ஒருவர் ஆங்கிலத்தில்
உங்களுக்கு எழுதியுள்ளதைப் பாருங்கள். அவருடைய கூற்றுதான் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது.
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளன என்பது மிகத்தெளிவாக உணரப்படுவது (இரா. இளங்குமரன் அவர்கள் தெளிவாக ஒரு சிலவற்றை எடுத்துக் காடியுள்ளார்.). தொல்காப்பியத்திலே உயிர்களின் பகுப்பு என்னும் பகுதி மிகச் சிறப்பானது. அதிலேயே இடைச்செருகல்
இருப்பதை இரா.இளங்குமரன் ஐயம் திரிபற விளக்கியுள்ளார். அவர்போல் ஆழமான அறிவு இல்லாதவரும் மிக எளிதாக இடைச்செருகல்களை அறியலாம். தொல்காப்பியம் உங்களிடம் இருந்தால்
நூற்பாக்கள் 571 முதல் 613 வரை படித்துப் பாருங்கள். அவைகளில் உயிர்ப்பிரிவுகள், விலங்குகளில் ஆண் பெண் பெயர்கள் பற்றியெல்லாம் கூறிவந்தவர், திடீர் என்று 614-615 ஆம் நூற்பாக்களில் அந்தணர்க்குரியன, அரசர்க்குரியன என்கிறார். இன்னும் நூற்பா 631 வரையிலும்
சில தொழிற்குலங்களுக்கு உண்டான சில செய்திகளைக் கூறுகின்றார். பின்னர் திடீர் என்று மீண்டும் 630 ஆம் நூற்பாவில் புறக்காழெனவே புல்லென்ப என்றும் 632 ஆம் நூற்பாவில் தோடே மடலே
என்று புல் வகையின் உறுப்புகள் பற்றியும் மர வகை உறுப்புகள் பற்றியும் கூறி 635 ஆம் நூற்பாவில் அப்பகுதியை முடிக்கின்றார். 615-629 முடிய உள்ளன இடைச்செருகல்கள் என்பன தெள்ளத்தெளிவாக
உணரலாம் (மொழி நடையும், கருத்துக்கள் அமைப்பும் முறையின்றி இருப்பதும் உணரலாம்). தமிழர்களிடையே தொழில்வழி இனங்களும் குலங்களும் இருந்திருக்க வேண்டும், ஆனால், பிறப்படிப்படையில் சாதிகளும், அவைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளும் இருந்ததில்லை
என்பது நான் புரிந்து வைத்துள்ளது. மாற்றுக் கருத்துக்கள் வலுவாக இருந்தால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்வேன். இடைச்செருகலாக உள்ள தொல்காப்பிய நூற்பாக்களிலும் (இவை 9-10 ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று படித்த நினைவு) பிறப்படிப்படையில்
சாதிகள் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனு நீதி நூலையும்
பிற பல ஸ்ம்ருதி நூல்களையும் படித்துப்பாருங்கள், பின்னர் அது போல தமிழில் ஏதேனும் நூல்கள் உள்ளனவா என்று காட்டுங்கள. ஊற்றுகண் தொல்காப்பியமா? இல்லை என்பதை ஊன்றிப் படித்தீர்களானால் உணரலாம். இடைச்செருகல் நூற்பாக்களைக் கொண்டு உண்மையைத் திரிக்காதீர்கள்.
C.R.Selvakumar //


இத்தகைய திரித்தல் செயல்களைக் கண்டு, அயர்ச்சியடையாமல் ,
உண்மைகளை உலகுக்கு தெரிவிப்பது நம் கடமையாகும்.

"இருட்டினில் வாழும் இதயங்களே, கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்."
நன்றி,